துப்பாக்கியை காட்டி மிரட்டிய பாமகநிர்வாகி கைது!
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி அருகே துப்பாக்கியை காட்டி கொலை மிரட்டல் விடுத்த பாமக ஒன்றிய சேர்மன் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் பாமகவைச் சேர்ந்த சந்திரசேகர் ஒன்றிய சேர்மனாக உள்ளார்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் முன்னாள் எம்.எல்.ஏ. சிவராமன் மகன் செந்தில்குமார் கள்ளக்குறிச்சி குளத்து மேட்டுத் தெருவில் புதிதாக பல் மருத்துவமனை கட்டி வருகிறார்.
அரசுக்கு சொந்தமான டாடா சுமோவில் சங்கராபுரம் ஒன்றிய சேர்மன் சந்திரசேகர், கள்ளக்குறிச்சி நகர பா.ம.க. செயலாளர் மாரியப்பன், ராஜா, ஜெயராம கிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு பேர் நேற்று முன்தினம் செந்தில் குமாரிடம் சென்று, தங்களுக்கு சொந்தமான இடம் இது, இங்கு மருத்துவமனை கட்ட கூடாது என்று மிரட்டியாக புகார் எழுந்தது.
இந் நிலையில், துப்பாக்கியை காட்டி மிரட்டி 50 லட்சம் ரூபாய் உடனே கொடுக்கவில்லை என்றால் உன்னையும், உன் குடும்பத்தையும் கொலை செய்து விடுவதாக கூறியதாக கள்ளக்குறிச்சி நகர பா.ம.க. செயலாளர் மாரியப்பன், ராஜா, ஜெயராம கிருஷ்ணன் மற்றும் அடையாளம் தெரியாத ஆறு பேர் மீது செந்தில்குமார் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதனையடுத்து சேர்மன் சந்திரசேகர், நகர செயலாளர் மாரியப்பன் இருவரையும் கள்ளக்குறிச்சி இன்ஸ்பெக்டர் உதயக்குமார் கைது செய்தார்.












Click it and Unblock the Notifications