அப்பாவித் தமிழர்கள் படுகொலை - விசாரணை நடத்த வேண்டும்: ஆம்னஸ்டி கோரிக்கை
கொழும்பு: இலங்கையில் கடைசிக் கட்டப் போரில் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டது குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், இந்த படுகொலைகள் தொடர்பாக ஐ.நா. தனக்குத் தெரிந்த தகவல்களை இனியும் மறைக்க முயலக் கூடாது. உண்மைகளை அது வெளியிட வேண்டும் எனவும் ஆம்னஸ்டி கோரியுள்ளது.
இலங்கையில், கடைசிக்கட்டப் போரின்போது ஒட்டுமொத்தமாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக டைம்ஸ் இதழ் வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை குறித்த தகவல் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கி மூனுக்கும், அவரது தூதர் விஜய் நம்பியாருக்கும் தெரியும் எனவும் டைம்ஸ் தெரிவித்துள்ளதால் சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த நிலையில் இந்த சண்டையின்போது உண்மையில் எத்தனை பேர் பலியானார்கள் என்பதை உடனடியாக விசாரித்து அறிய வேண்டும் என ஆம்னஸ்டி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து ஆம்னஸ்டியின் ஆசியா பசிபிக் பிராந்திய இயக்குநர் சாம் ஜரிபி கூறுகையில், போரின்போது இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் ஏராளமான போர்க் குற்றங்களை செய்துள்ளனர். இதுகுறித்து சர்வதேச அளவில் சுயேச்சையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.
இப்படிப்பட்ட விசாரணை நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை டைம்ஸ் செய்தி வலியுறுத்துவதாக உள்ளது. உண்மை வெளிவரத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஐ.நா. எடுக்க வேண்டும். வடகிழக்கு இலங்கையில் நடந்த ரத்தக்குளியல் குறித்த தகவல்கள் வெளிப்பட வேண்டும்.
போரின்போது எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற எண்ணிக்கை நிச்சயம் ஐ.நா.வுக்குத் தெரியும். எனவே அதை இனியும் அது மறுக்காமல் உடனடியாக அம்பலப்படுத்த வேண்டும்.
போர் முடிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்திருந்தாலும் கூட இன்னும் அங்கு மனித உரிமை மீறல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன.
2 லட்சத்து 80 ஆயிரம் அப்பாவி மக்கள் மிகக் குறுகிய அகதிகள் முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலருக்கு இன்னும் முறையான நிவாரணங்கள் வழங்கப்படவில்லை.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள், மிகப் பெரும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரித்தே ஆக வேண்டும். இதை ஐ.நா. செய்ய வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
-
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? ஒரே போடாக போட்ட எடப்பாடி பழனிசாமி -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
41.5%, 36.2%, 13.6%.. திமுக, அதிமுக கணக்கை தலைகீழாக மாற்றும் 3வது நபர் இவர்தானா? உடைத்து சொன்ன சர்வே -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
தைலாபுரத்தில் 90 நிமிட ரகசியம்: சசிகலா ராமதாஸுக்கு தந்த க்ளூ.. தலைகீழாக மாறும் வட தென் மாவட்ட கணக்கு -
சிறகடிக்க ஆசை: மீனா சொன்ன குட் நியூஸ்.. சந்தோஷத்தில் அண்ணாமலை! சத்யா காதலுக்காக முத்து எடுக்கும் முடிவு -
கேஸ் தட்டுப்பாட்டுக்கு ‘குட்பை'.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்கும் இந்திய கப்பல்கள்.. என்னென்ன பலன்? டேட்டா பாருங்க -
சுயநலமாக இருக்காதீங்க.. என்ன நடந்தது என்று தெரியாமல் இப்படி பேசாதீங்க.. நடிகர் ஸ்ரீமன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications