இனவெறித் தாக்குதலைக் கண்டித்து மெல்போர்னில் இந்தியர்கள் பேரணி

இனவெறித் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கோரி நடந்த இந்தப் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
அமைதிப் பேரணி என்ற பெயரில் நடந்த இந்தப் பேரணியில், ஆஸ்திரேலிய இந்திய மாணவர்கள் சம்மேளனம், தேசிய மாணவர் யூனியன் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.
இனவெறித் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வரும் மாணவர் ஷ்ராவன் குமார் சிகிச்சை பெற்று வரும் ராயல் மெல்போர்ன் மருத்துவமனை முன்பிரருந்த இந்தப் பேரணி தொடங்கியது.
ஸ்பிரிங் தெரு வழியாக சென்ற பேரணி விக்டோரியா நாடாளுமன்றத்தில் முடிவடைந்தது. ஊர்வலத்தில் சென்றவர்கள் பாரத மாதாவுக்கு ஜே என்று கோஷமிட்டபடி சென்றனர்.
இனவெறித் தாக்குதலை நிறுத்து, எங்களது மாணவர்களை காப்பாற்றுங்கள் என்ற தட்டிகளையும் கைகளில் ஏந்திச் சென்றனர்.
பேரணியையொட்டி ஸ்பிரிங் தெருவில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் போக்குவரத்தும் திருப்பி விடப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications