தமிழர்களின் இதயங்களை கவர்வோம்-ராஜபக்சே
கொழும்பு: விடுதலை புலிகளுக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்துள்ள இலங்கை அதிபர் ராஜபக்சே, தமிழர்கள் அச்சமின்றி வாழ வழி செய்வோம் என்றும் அவர்களது இதயத்தை கவர்வோம் என்றும் பேசினார்.
விடுதலை புலிகளுக்கு எதிரான போரில் வென்றதையடுத்து துறைமுகப் பகுதியில் நடந்த விழாவில் தமிழில் பேசிய ராஜபக்சே கூறுகையில்,
இந்த போர் விடுதலை புலிகளுக்கு எதிரானது. தமிழர்களுக்கு எதிரானது அல்ல. பாசத்துக்குரிய இலங்கை ராணுவ வீரர்களே, தீவிரவாதத்துக்கு எதிரான போர் முடிந்துவிட்டது. இனி நாம் தமிழர்களின் இதயங்களை வெற்றி கொள்ள வேண்டியுள்ளது. நீங்கள் தமிழ் மக்களை காக்க வேண்டும். அவர்கள் இங்கு பயமில்லாம் வாழ வேண்டும். இது நம்முடைய பொறுப்பு என்றார்.
சுமார் மூன்று மணி நேரம் நடந்த இந்த விழாவில் ''போர் முடிந்துவிட்டது. விடுதலை புலிகள் அழிக்கப்பட்டுவிட்டனர். நாடு சுதந்திரமாகிவிட்டது'' என்று எழுதப்பட்ட செய்தி சுருளை முப்படை தளபதிகளிடம் ராஜபக்சே வழங்கினர்.
விழாவில் ராணுவத்தின் பீரங்கி பட்டாலியன்கள் அணிவகுத்து சென்றன.
இதை தொடர்ந்து கடலில் இலங்கையின் கப்பற்படை கப்பல்களும் அணிவகுத்தன.
கடைசியாக இலங்கை விமான படையின் சாகச நிகழ்ச்சியுடன் விழா நிறைபெற்றது. விழாவில் விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.
உச்சக்கட்ட பாதுகாப்பு...
இந்த விழாவில் இலங்கையின் முக்கிய தலைவர்கள் அனைவரும் கலந்து கொண்டதால், பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சி நடந்த காலே பேஸ் கிரீன் கடற்கரைக்கு செல்லும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டிருந்தன.
புலிகள் கொரில்லாத் தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சத்தில் அப்பகுதியில் கட்டிடங்களின் மேல் தளத்தில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் காவல் இருந்தனர். விமானத்தை தாக்கி அழிக்கும் ஏவுகணைகளை இலங்கை அரசு நிலையில் வைத்திருந்தது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி












Click it and Unblock the Notifications