கும்பகோணத்தில் சமகவின் 3வது ஆண்டு விழா!
சென்னை: சரத்குமார் கட்சியின் மாநில மகளிரணி துணை செயலாளர் புரசை கீதா, மதுரை மாநகர மகளிரணிச் செயலாளர் தெரஸா ஆகியோர் தற்காலிகமாக தங்களது பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்
வெளியிட்டுள்ள அறிக்கை:
சமத்துவ மக்கள் கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் கட்சி தலைவர் சரத்குமாரின் சுற்றுப் பயணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
ஜூலை 5ம் தேதி சேலத்தில் கள் இறக்க அனுமதி கோரி போராட்டம் நடத்துவது தொடர்பாகவும், ஜூலை 15ம் தேதி விருதுநகரில் காமராஜர் மணிமண்டப பணிகளை துவக்குவது மற்றும் அன்று மாலை மதுரையில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 30ம் தேதி கும்பகோணத்தில் நடக்கும் கட்சியின் மூன்றாமாண்டு தொடக்க விழா பொதுக்கூட்டம் மற்றும் அன்று காலை கட்சியின் பொதுக் குழு கூட்டத்தில் கலந்து கொள்வது போன்றவையும் விவாதிக்கப்பட்டது.
மேலும் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகளை மாற்றியமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து முதல் கட்டமாக மாநில மகளிரணி துணை செயலாளர் புரசை கீதா, தொண்டரணி அமைப்பாளர் சந்திரசேகர், தென் சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் கிண்டி வேணு, மகளிரணி செயலாளர் வாணி, மதுரை மாநகர மகளிரணி செயலாளர் தெரஸா ஆகியோர் தற்காலிகமாக தங்களது பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications