இலங்கை அரசுக்கு தண்டனை-தி.க. கோரிக்கை
சென்னை: ஈழ போரில் கடைசி இரண்டு நாட்களில் போர் நெறிமுறைகளை மறந்து 20,000க்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசுக்கு உலக நாடுகள் தண்டனை பெற்றுத் தர வேண்டும் திராவிட கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதன் செயற்குழு கூட்டம் அதன் வீரமணி தலைமையில் சென்னை பெரியார் திடலில் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
ஐநா சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்தது கோடான கோடி தமிழர்களுக்கு வேதனை தருவதாக உள்ளது.
போரின் முடிவில் கடைசி சில நாட்களில் இலங்கை ராணுவத்தால், யுத்த நெறிமுறைகளையெல்லாம் புறந்தள்ளிவிட்டு 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். கொடூரமாக மக்களை கொன்றவர்களுக்கு உரிய தண்டணைப் பெற்றுத்தர உலக நாடுகள் முன் வர வேண்டும்.
முகாம்களில் முடக்கி வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி சென்று குடியேற உடனடி நடவடிக்கை எடுக்க இலங்கை அரசை நிர்பந்திக்க உலக நாடுகள் முன் வர வேண்டும்.
சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை எந்த காரணத்தை கொண்டும் முடக்கிவிடாமல் விரைவில் செயல்படுத்த வேண்டும். திராவிடர் கழகத்தின் மூட நம்பிக்கை ஒழிப்பு பிரசார பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications