துப்பாக்கி சூடு-பாக். ராணுவம் மீண்டும் அத்துமீறல்
ஜம்மு: இந்திய பகுதிக்குள் ரோந்து செய்து கொண்டிருந்த ராணுவ வீரர்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியது. இதையடுத்து இந்தியா, பாகிஸ்தானிடம் விளக்கம் கேட்டுள்ளது.
கடந்த 2003 நவம்பரில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் தொடர்ந்து இந்திய பகுதிக்குள் இருக்கும் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிசூடு நடத்தி வருகிறது.
கடந்த ஆண்டு வரை பாகிஸ்தான் இது போல் 30 முறை இந்திய ராணுவத்தின் மீது அத்துமீறி துப்பாக்கிசூடு நடத்தியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஏகே அந்தோணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நேற்று காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மற்றும் ரஜோரி பகுதியில் இருக்கும் சவாஜியன் என்ற இடத்தில் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுக்கு அருகே நேற்று காலை 10.45 மணிக்கு திடீரென துப்பாக்கிசூடு நடத்தினர். இதற்கு இந்திய வீரர்கள் பதிலடி எதுவும் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சுமார் 30 நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிசூட்டில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இது குறித்து ராணுவ அதிகாரி பிரிகேடியர் குர்தீப் சிங் கூறுகையில், பாகிஸ்தான் படைகள் மூன்று அல்லது நான்கு முறை துப்பாக்கியால் சுட்டன. 4 முதல் 5 சிறிய ரக ஆயுதங்கள் மூலமாக இந்த துப்பாக்கி சூடு நடந்திருக்கலாம் என்று கருதுகிறோம் என்றார்.
இந்த சம்பவத்தை அடுத்து இந்திய ராணுவம் விளக்கம் கேட்டு பாகிஸ்தானுக்கு கடிதம் அனுப்பியுள்ளது.
தீவிரவாதிகள் இந்தியாவுக்குள் ஊடுருவ உதவும் நோக்கத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் இந்திய ராணுவத்தின் கவனத்தை திசை திருப்ப சில சமயம் இது போன்ற துப்பாக்கிசூட்டில் ஈடுபடுவார்கள். தற்போது அது போல் எதுவும் நடக்காமல் தடுக்க ராணுவம் அப்பகுதியில் தொடர்ந்து உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
-
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
"ஈரானுக்கு ஆதரவு".. ஷியா இஸ்லாமியர்களை விரட்டியடிக்கும் பாகிஸ்தான்? ராணுவ தளபதியால் சர்ச்சை -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications