புதுக்கோட்டை கலெக்டர்-ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவராக சுகந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
வேறு சில ஐஏஎஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு கைவினைப் பொருள் வளர்ச்சி கழக மேலாண்மை இயக்குனர் ராஜகோபால் கைத்தறி, கைவினை பொருள், காதி துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார். இவர் தமிழ்நாடு காதி கிராம தொழில் மாநில தலைமை அதிகாரியாகவும் இருப்பார்.
சமூக நலத்துறை முதன்மை செயலாளர் பழனியப்பன், வருவாய் துறை முதன்மை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். கைத்தறி காதிதுறை செயலாளர் விஸ்வநாத் ஷெகான்கா ஆதி திராவிடர் நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
காதி தொழில் வாரிய தலைமை நிர்வாக அதிகாரி ராம்மோகனராஜ் சமூக நலத்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை கலெக்டர் ரீட்டா ஹரிஷ் தாக்கர் வருவாய்த்துறை துணை செயலாளராக மாற்றப் பட்டுள்ளார். வேலூர் கூடுதல் கலெக்டர் சுகந்தி புதுக்கோட்டை கலெக்டராக நியமிக்கப்பட்டு உள்ளார்.