அலுவாலியா மீண்டும் திட்ட கமிஷன் துணைத் தலைவர்

கடந்த முறை மத்தியில் மன்மோகன் சி்ங் தலைமையிலான அரசு பதவியேற்றவுடன் இந்தப் பதவியில் அலுவாலியா நியமிக்கப்பட்டார். மீண்டும் அதே ஆட்சி அமைந்துள்ள நிலையில் அலுவாலியாவே மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
உலக வங்கி, ஐஎம்எப் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச நிதியமைப்புகளில் பணியாற்றியவரான அலுவாலியா பிரதமரின் மிக நெருங்கிய நண்பர். பொருளாதார விவராரங்களில் இருவருமே ஒத்த கருத்துக்களைக் கொண்டவர்கள்.
அலுவாலியா மறு நியமனம் செய்யப்பட்டாலும் திட்ட கமிஷன் உறுப்பினர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
இதுவரை உறுப்பினர்களாக இருந்த 2 பேர் நீக்கப்பட்டு அவர்களுக்குப் பதிலாக ளாக மிகிர் ஷா, சுமித்ரா செளத்ரி ஆகியோர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் தவிர ஏற்கனவே உறுப்பினர்களாக இருந்த பி.கே.சதுர்வேதி, அபிஜித் சென், சயீதா ஹமீது ஆகியோர் உறுப்பினர்களாக தொடர்கின்றனர்.












Click it and Unblock the Notifications