வன்னியில் பெருமளவில் ராணுவம் குவிப்பு- விடுதலைப் புலிகளை தேடுகின்றனர்

ராணுவத்தின் 28வது பட்டாலியன் இதில் ஈடுபட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வன்னிப் பகுதியின் பாதுகாப்புகளை பலப்படுத்துவதில் இலங்கை ராணுவம் பெரிய அளவில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முல்லைத்தீவு, கிளிநொச்சிப் பகுதிகளில் படைத் தலைமையகங்களை நிறுவியுள்ள இலங்கை அரசு மேஜர் ஜெனரல் நந்தன உடுவத்த, மேஜர் ஜெனரல் சானா குணதிலக ஆகியோரை அதிகாரிகளாக நியமித்துள்ளது.
மேலும் ராணுவ தளபதி சரத் பொன்சேகா அடிக்கடி வன்னிப் பகுதிக்கு பயணங்களை மேற்கொண்டு வருவதுடன், படையினரின் நிலைகளையும் பலப்படுத்தி வருகின்றார். வன்னிப் பகுதியில் புதிய படை தளங்களை அமைப்பது தொடர்பாகவும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
வன்னிப் பகுதியில் உள்ள விடுதலைப் புலிகளை தேடி அழிக்கும் நடவடிக்கையில் சிறப்புப் படையினரும், கமாண்டோ படையினரும் மேலும் இரு பட்டாலியன்களும் இணைந்து நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடைசிக் கட்ட போர் நடவடிக்கையில் ஈடுபட்டுவந்த 28வது பட்டாலியன் படையினர் விடுதலைப் புலிகளின் எஞ்சியுள்ளவர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
53, 58வது படை பிரிவினரும், மேலும் இரு படைப் பிரிவுகளைக் கொண்ட அணிகளாக மாற்றப்பட்டுள்ளனர் என்கிறது அந்த செய்தி.
இதற்கிடையே, விஸ்வமடு, இரணமடு, புதுக்குடியிருப்பு, பம்பை மடு ஆகிய பகுதிகளில் பெருமளவிலான ஆயுதங்களை ராணுவம் கண்டுபிடித்து மீட்டுள்ளதாம்.
500 ரவுண்டு பலகுழல் இயந்திரத் துப்பாக்கிக்கான தோட்டாக்ள், 33 கையெறி குண்டுகள், ஐந்து கண்ணிவெடிகள், ஐந்து ராக்கெட் மூலம் ஏவப்படும் கிரெனடுகள், ஒரு பூபி டிராப், ஒரு அருள் குண்டு, ஒரு செல்போன், சில ஆடைகளை ராணுவம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிரியமடு என்ற இடத்தில், ஒரு கண்ணிவெடி 140 பென் டார்ச் பேட்டரிகள், 28 பேட்டரிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.












Click it and Unblock the Notifications