ராஜ்யசபாவில் திமுக-அதிமுக மோதல்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ராஜ்யசபாவில் இன்று திமுக, காங்கிரஸ்- அதிமுக உறுப்பினர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது அதிமுக எம்பி மைத்ரேயன் பேசினார். இவர் தொலைக்காட்சி விவாதங்களிலேயே முடிந்தவரை இந்தியில் தான் பேசுவார்.

அவர் இன்று இந்தியையும் ஆங்கிலத்தையும கலந்து ராஜ்யசபாவில் பேசுகையில்,

மத்தியில் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங் முதலில் தமிழகத்தைச் சேர்ந்த இரு ஊழல் கறை படிந்த அமைச்சர்களை சேர்க்க மறுத்தார்.

ஆனால், நெருக்கடி காரணமாக அவர்களை சேர்க்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார். தமிழகத்தைச் சேர்ந்த அந்த சிலரால் மத்திய அரசுக்கு நல்ல பெயர் கிடைக்காது.

("Wahi hota hai jo manzoore khuda hota hai...and khuda is sitting in Chennai''). கடவுள் எதை நினைக்கிறாரோ அது தான் நடக்கும். அந்தக் கடவுள் சென்னையில் அமர்ந்திருக்கிறார் என்றார்.

இதற்கு திமுக எம்பிக்களும் தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்பிக்களும் கடும் எதிர்ப்புத் தெரிவி்த்ததால் சிறிது நேரம் அமளி நிலவியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+