வைகோ மீது அவதூறு வழக்கு-திமுக தொடர்ந்தது

எழும்பூர் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் சேது மாதவன் முன் நேரில் இன்று ஆஜராகி இது தொடர்பான மனுவை தாக்கல் செய்தார் வீராசாமி.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
இயக்குனர் பாரதிராஜா அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து சென்னையில் மே 30ம் தேதி பொதுக் கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் பேசிய வைகோ, அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவம் தமிழக முதலமைச்சருக்கு தெரிந்தே நடந்தவை என்று பேசியதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.
வைகோவின் இந்தப் பேச்சு முதல்வர் கருணாநிதியின் நற்பெயருக்கும், தமிழ்நாடு அரசுக்கும் களங்கம் உண்டாக்கும் வகையில் அமைந்துள்ளது. வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் பொதுமக்கள் மத்தியில் முதல்வருக்கு உள்ள மரியாதைக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் அவர் பேசியுள்ளார்.
வைகோவின் இந்த பேச்சு இந்திய தண்டனைச்சட்டம் 499, 500 பிரிவின் கீழ் அவதூறு சட்டத்தின் கீழ் குற்றமாகும். மேலும் இது குறித்து ஜூன் 1ம் தேதி முதலமைச்சர் சார்பில் வைகோவிற்கே வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீசை பெற்று கொண்ட அவர் அவதூறாக பேசியதற்காக எந்த மன்னிப்பும் கேட்கவில்லை. அதற்காக எந்த வருத்தமும் தெரிவிக்கவில்லை.
அவ்வாறு அவர் பேசியதாக ஏற்று கொண்டு ஜூன் 3ம் தேதி கருணாநிதிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். கருணாநிதிக்கு எதிராக தெரிந்தே வைகோ பேசியுள்ளார். எனவே, அவதூறு சட்டத்தின் கீழ் அவரை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
விசாரணையை வரும் 16ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் ஆற்காடு வீராசாமி கோர்ட்டில் ஆஜராகி பிரதான வாக்குமூலம் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இந்த விஷயத்தில் உயிரே போனாலும் முதல்வரிடம் மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று வைகோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுக மாஜிகளுக்கு கட் அவுட்..திமுக உ.பி.களுக்கு கெட் அவுட்டா? 19 சீட்டுகளை அள்ளிய ’அம்மா’ பிள்ளைகள் -
"மகளிருக்கு ஜாக்பாட்".. ரூ.8,000 கூப்பன் உள்பட பெண்களுக்கு திமுக தந்த டாப் 14 அறிவிப்புகள் – லிஸ்ட் -
ஆண்டிப்பட்டியில் மீண்டும் ‘சகோதர யுத்தம்’.. அண்ணன் திமுக vs தம்பி அதிமுக.. வெல்லப்போவது யார்? -
ரூ.8000 கூப்பன் முதல் 2 மடங்கு உயரும் உரிமை தொகை வரை.. திமுகவின் 7 முக்கிய வாக்குறுதிகள்! ஸ்டாலின் அறிவிப்பு -
Rahul Gandhi: தமிழக அரசியல் மீது ராகுல் காந்தியின் பாராமுகம்… திமுக தலைமை மீது அதிருப்தியா? -
விவசாயிகளுக்கு திமுகவின் ‘ஜாக்பாட்’! மீட்டர் பொருத்தப்படாத நவீன பம்ப்செட் வழங்கப்படும் என வாக்குறுதி -
DMK MANIFESTO: மகளிர் உரிமைத்தொகை டூ முதியோர் பென்ஷன் வரை.. 13 திட்டங்களின் உதவித்தொகைகள் உயர்வு – ஸ்டாலின் -
புதுமை பெண், தமிழ்ப் புதல்வன் திட்டத்திற்கான உதவித்தொகை ரூ.1,500ஆக உயர்த்தப்படும்: திமுக வாக்குறுதி! -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
என்கிட்டயே அழுது சீன் போடுறீயா? நான் என்ன கல்லா.. டிஆர் பாலுவை முற்றுகையிட்ட எஸ்ஆர் ராஜா ஆதரவாளர்கள் -
திமுக VS அதிமுக.. சென்னையில் 12 இடங்கள் உள்பட 121 தொகுதிகளில் நேரடி போட்டி.. மாவட்ட வாரியாக முழு லிஸ்ட் -
பெண்கள், படித்தவர்களுக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்..டாக்டர் பட்டம் பெற்றவர்கள் மட்டும் இத்தனை பேரா?












Click it and Unblock the Notifications