தீவிரவாத அச்சுறுத்தல்-சென்னையை கண்காணிக்க கேமராக்கள்!

இதன் மூலம் நகர் முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்படும்.
சமீபத்தில் தமிழகம் உள்பட தென்னிந்தியா முழுவதும் தீவிரவாத தாக்குதல் நடைபெறும் அபாயம் இருப்பதாக ஐபி எச்சரித்தது. இதை உறுதி செய்வது போல டெல்லியில் பிடிபட்ட பாகிஸ்தான் தீவிரவாதி மத்னியும், சென்னையில் படித்த வேலையில்லாத இளைஞர்களைத் தேர்வு செய்து தீவிரவாத பயிற்சி அளிக்கத் திட்டமிட்டிருந்ததாக தெரிவித்தார்.
இதையடுத்து சென்னை நகரின் பாதுகாப்பு பலப்படுத்தப்படவுள்ளது.
சென்னை முழுவதும் 75 இடங்களில் ஸ்பை கேம் எனப்படும் ரகசிய கண்காணி்பு காமராக்கள் பொருத்தப்படவுள்ளன. இதன் மூலம் சந்தேகப்படும்படியான நபர்களின் நடமாட்டத்தை கண்காணித்து கண்டுபிடிக்க முடியும்.
இதுகுறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாகவே தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்பாக எஙகளுக்கு அவ்வப்போது தகவல்கள் வருகின்றன. இதையடுத்து ரகசியக் கண்காணிப்பு கேமராக்களைப் பொருத்தி கண்காணிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.
இந்த கேமராக்கள் அனைத்தும் வணிக வளாகங்கள், ரயில்வே நிலையங்கள், மத்திய, மாநில அரசு அலுவலகங்கள், ரோந்து வாகனங்கள், முக்கிய சாலைகள் உள்ளிட்ட இடங்களில் நிறுவப்படவுள்ளன.
சென்னை மாநகர போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் ஷகீல் அக்தார் கூறுகையில், தற்போது 35 கண்காணிப்பு கேமராக்கள் நகரில் உள்ளன. இவை போக்குவரத்து விதி மீறலைக் கண்காணிக்க நிறுவப்பட்டவையாகும். தற்போது இவை பாதுகாப்பு கண்காணிப்புக்கும் பயன்படுத்தப்படும் என்றார்.
இன்னும் சில வாரங்களில் சென்னை அருகே என்.எஸ்.ஜி,. முகாம் அமையவுள்ளது. இதன் மூலம் சென்னை நகரின் பாதுகாப்பு மேலும் பலப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
Gold Rate Today: ஒரே அடியாக சரிந்த தங்கம் விலை.. ரூ.1,120 குறைந்தது! சென்னையில் ஒரு கிராம் எவ்வளவு? -
அதிமுக கோட்டையில் 'தென்னந்தோப்பு'! சசிகலாவின் மாஸ்டர் பிளான்! இரட்டை இலைக்கு செக் வைக்கும் 'பச்சை'! -
Heavy Rain: அடுத்த ஒரு மணி நேரம் விடாமல் கொட்டப்போகுது மழை.. குமரி, நெல்லைக்கு பறக்கும் அலர்ட்! -
“பாட்டிலுக்கு 10 ரூபாய்”: பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை அமல்படுத்தாவிட்டால்- ஐகோர்ட் வார்னிங் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications