கொச்சியில் லட்சக்கணக்கில் மோசடி-சென்னையில் இருவர் கைது
கொச்சி: கேரள மாநிலம் கொச்சியில் பல லட்சம் பேரிடம் பணத்தை வசூலித்து விட்டு தலைமறைவான தமிழகத்தைச் சேர்ந்த இருவரை கொச்சி போலீஸார், சென்னையில் வைத்துக் கைது செய்தனர்.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் முகம்மது ஜாகிர். சென்னையைச் சேர்ந்தவர் இன்பராஜ். இருவரும் கொச்சியில், ரவிபுரம் என்ற இடத்தில் ஒரு அலுவலகம் திறந்தனர்.
கொச்சி நகரைச் சேர்ந்த தொழிலதிபர்களை அணுகி, உங்களுக்கு கமிஷன் அடிப்படையில் பெருமளவில் வங்கிகளிலிருந்து லோன் வாங்கித் தருகிறோம் என்று கூறி பெரும் பணத்தைக் கமிஷனாக பெற்றுள்ளனர்.
ஆனால் சொன்னபடி யாருக்கும் லோன் வாங்கித் தரவில்லை. பல லட்சம் பணம் சேர்ந்ததும் ரவிபுரம் அலுவலகத்தை மூடி விட்டு சென்னைக்குத் தப்பி விட்டனர்.
இதையடுத்து போலீஸார் ரவிபுரம் அலுவலகத்தை உடைத்து சோதனை செய்து பார்த்தனர். அங்கு ஏராளமான போலி செக்குகள் இருந்தன.
இதையடுத்து இருவரையும் பிடிக்க வலை விரிக்கப்பட்டது. அதில் இருவரும் சென்னையில் இருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் சென்னை வந்தனர். சென்னை போலீஸாருடன் இணைந்து இருவரையும் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்து கொச்சி கொண்டு சென்றனர்.












Click it and Unblock the Notifications