புலிகளுக்கு ஆதரவாக பேசும் இலங்கையர்களின் விசாவை ரத்து செய்க - சாமி
சென்னை: இந்தியாவுக்கு வந்து விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசும் இலங்கை நாட்டவரின் விசாவை ரத்து செய்து அவர்களை உடனடியாக இலங்கைக்கே திருப்பி அனுப்ப வேண்டும் என ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி கூறியுள்ளார்.
சாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பிரசாரம் செய்யும் அவர்களில் பெரும்பாலானோர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகப் பேசி வருகின்றனர்.
இந்தியாவுடன் நல்லுறவு கொண்டிருக்கும் இலங்கை ஒரு ஜனநாயக நாடு. எனவே இந்தியாவில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக பேசுவதற்கு அந்நாட்டினருக்கு உரிமை கிடையாது. அவர்கள் வேண்டுமானால் இலங்கையில் இருந்து அப்படி பேசிக் கொள்ளலாம்.
வெளிநாட்டில் இருந்து கொண்டு இந்தியாவைப் பற்றி தரக்குறைவாக இந்தியர்கள் பேசினால் அதை தாங்கிக் கொள்ள முடியாது. இந்தியாவின் ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு இந்தியா பலியாகி விடக் கூடாது என்று கூறியுள்ளார் சாமி.












Click it and Unblock the Notifications