நாகை: மாஜிஸ்திரேட் மனைவி தற்கொலை
நாகப்பட்டினம்: நாகை மாவட்டத் தலைமை மாஜிஸ்திரேட் மனைவி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிபதியாக பணியாற்றி வருபவர் ராஜமாணிக்கம்.
நாகை காடம்பாடிப் பகுதியில் உள்ள நீதிபதிகள் குடியிருப்பில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார்.
இவரது மனைவி மீனாட்சி.
ராஜமாணிக்கம் வெளியூர் சென்றதால் அவரது மனைவி மட்டும் தனியாக வீட்டில் இருந்தார்.
வெளியூர் சென்று விட்டு நீதிபதி ராஜமாணிக்கம் நாகை திரும்பினார். அப்போது, வீட்டில் மாடியறையில் அவரது மனைவி மீனாட்சி, மின் விசிறியில் தூக்குப் போட்டு இறந்த நிலையில் இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக வெளிப்பாளையம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.












Click it and Unblock the Notifications