ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும்: மேனன்

அதிபர் ராஜபக்சே என்ன முடிவெடுத்தாலும் அதை இந்தியா உறுதியுடன் ஆதரிக்கும் என்று கூறியுள்ளார் வெளியுறவுத் துறை செயலாளர் மேனன்.
இலங்கையிலிருந்து வந்திருந்த சிங்கள பத்திரிக்கையாளர்கள் மேனனை சந்தித்து பேசினர்.
அப்போது அவர்களிடையே மேனன் பேசுகையில், இலங்கை அரசின் அடுத்த கட்ட நடவடிக்கை மறு சீரமைப்பு குறித்துதான் இருக்க முடியும். இதை இலங்கை அரசுதான் தீர்மானிக்க முடியும்.
இந்தியாவோ அல்லது நார்வே நாட்டின் வேலை அல்ல இது. இந்த நாடுகள் இலங்கை எடுக்கும் முடிவுகளில் தலையிடவும் முடியாது. இலங்கைக்கு நல்லது எது என்பதை பிறர் சொல்லத் தேவையில்லை.
அதிபர் ராஜபக்சே இதுகுறித்து தெளிவாகவே கூறியுள்ளார். அது என்னையும் கவர்ந்தது. இலங்கைக்கு எது சரியானது என்பது குறித்து அதிபர் ராஜபக்சே எடுக்கும் எந்த வகையான முடிவுகளுக்கும் இந்தியா உறுதியுடன் தொடர்ந்து ஆதரவு தரும்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த 2 பேர் டெல்லி வந்துள்ளதாக அறிகிறேன். அவர்கள் அவ்வப்போது இங்கு வந்து டெல்லியில் உள்ள பல்வேறு தலைவர்களுடன் பேசிக் கொண்டுதான் உள்ளனர். இருப்பினும் பிரதமரை சந்திக்க அவர்களுக்கு நேரம் ஒதுக்கப்படவில்லை என்பதை உறுதியாக கூறுகிறேன்.
இவர்களது வருகையால் இலங்கை அரசுத் தரப்பில் எந்தவித பீதியும் அடையத் தேவையில்லை.
இந்தியா, இலங்கைக்கு இடையே, பாதுகாப்பு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என நீண்ட காலமாக பேசப்பட்டு வருகிறது. விரைவில் அது நிறைவேறும்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்கள் மீது தமிழர்கள் தாக்குதல் நடத்துவதை வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் விரும்பவில்லை.
தற்போது இலங்கையில் போர் முடிந்து விட்டது. எனவே இந்திய, இலங்கை மீடியாக்கள் போர் குறித்த செய்திகளை விட்டு விட்டு வேறு செய்திகளுக்குப் போவது நல்லது.
இந்தியாவில் இலங்கைக்குப் பெரிய மார்க்கெட் உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஜவுளித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும்.
இந்தியாவும், இலங்கையும் இணைந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காட்ட முடியும் என்றார் மேனன்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications