2 டிஐஜிக்கள் உள்பட 10 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் இரண்டு டிஐஜிக்கள் உள்பட 10 காவல்துறை உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து உள்துறை முதன்மைச்செயலாளர் எஸ்.மாலதி நேற்று வெளியிட்டுள்ள உத்தரவு:
- மாநில போக்குவரத்துத்துறை திட்டமிடல் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. எஸ்.கே.டோக்ரா, சென்னை சிவில் சப்ளை சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- சென்னை ஐ.ஜி (பயிற்சி) டி.ராதாகிருஷ்ணன், மாநில போக்குவரத்துத்துறை திட்டமிடல் பிரிவு ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு இருக்கிறார்.
- திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக இருக்கும் ஏ.அலெக்ஸாண்டர் மோகன், சென்னையில் உள்ள சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி., திருச்சி மாநகர போலீஸ் கமிஷனராக கூடுதல் பொறுப்பு வகிப்பார்.
- சென்னையில் உள்ள சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐ.ஜி. பிரதீப் வி.பிலிப், தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக மாற்றப்பட்டு உள்ளார்.
- தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தின் தலைமை கண்காணிப்பு அதிகாரியாக பணியாற்றும் சீமா அகர்வால், போலீஸ் நலப்பிரிவு (சென்னை) ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்.
- ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக பணியாற்றும் சந்தீப் மிட்டல், திருச்சி ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு உள்ளார்.
- திருச்சி ஆயுதப்படை போலீஸ் டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி, திருச்சி சரக டி.ஐ.ஜி.யாக மாற்றப்பட்டு இருக்கிறார்.
- மதுரை சரக டி.ஐ.ஜி.யாக இருக்கும் சந்தீப்ராய் ரத்தோர், சென்னை ரெயில்வே போலீஸ் டி.ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டு உள்ளார்.
- திருச்சி சரக டி.ஐ.ஜி. பி.பாலசுப்பிரமணியன், மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி.யாக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.












Click it and Unblock the Notifications