33% மகளிர் இட ஒதுக்கீடு குறைக்கப்படாது-அரசு
டெல்லி: மகளிருக்கு நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற அளவைக் குறைக்கும் எண்ணமே அரசிடம் இல்லை. 33 சதவீதம் என்ற அளவில் அரசு உறுதியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவுக்கு பல்வேறு கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக வட இந்திய கட்சிகள்தான் இதை கடுமையாக எதிர்க்கின்றன. இதில் மாற்றம் செய்யாமல் நிறைவேற்ற முயலக் கூடாது என அவை திட்டவட்டமாக கூறியுள்ளன.
இதனால் இட ஒதுக்கீட்டை அளவை 20 சதவீதமாக குறைத்து மசோதாவை நிறைவேற்றி விட மத்திய அரசு யோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகின.
ஆனால் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. இதுகுறித்து நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் செய்தியாளர்களிடம் கூறுகையில், 33 சதவீத இட ஒதுக்கீடு என்ற அளவில் எந்தவித மாற்றமும் இல்லை.
மகளிருக்கான இட ஒதுக்கீட்டில் நீக்குப் போக்கு, நீர்த்துப் போகச் செய்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை. இதெல்லாம் ஊகமான செய்திகள்.
இந்த மசோதாவை நிறைவேற்ற அனைத்துத் தரப்புடனும் பேசி ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சிக்கும்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகையில், இந்த அரசின் முதல் முன்னுரிமைத் திட்டத்தில் மகளிர் மசோதாவும் ஒன்று குறிப்பிட்டார்.
தற்போது இந்த மசோதாவை நாடாளுமன்ற நிலைக்குழு முன்பு உள்ளது. விரைவில் இந்தக் குழு மாற்றியமைக்கப்படவுள்ளது. அதன் அறிக்கைக்காக அரசு தற்போது காத்திருக்கிறது என்றார் பன்சால்.
33 சதவீதம் என்பதில் மாற்றம் இல்லை - சோனியா
இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் கூட 33 சதவீதம் என்ற அளவை 20 சதவீதமாக குறைக்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
நேற்று டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், 33 சதவீத இட ஒதுக்கீடு என்பதை குறைக்கும் எண்ணம் அரசிடம் இல்லை.
இந்த விவகாரத்தி்ல் இதுவரை ஒருமித்த கருத்து ஏற்படாதது கவலை தருகிறது. இருப்பினும் அனைத்துத் தரப்பினரின் ஒத்துழைப்பையும் பெற்று இந்த மசோதாவை நிறைவேற்ற அரசும், காங்கிரஸ் கட்சியும் உறுதியாக உள்ளன.
பெண்கள் உயர்வு பெறுவதை விரும்பாத சில சக்திகள்தான் (முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ், லாலு பிரசாத் யாதவ்) இந்த மசோதா குறித்து அவதூறான கருத்தைக் கூறி வருகின்றன.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறுவதை விரும்பாதவர்கள்தான், உள் ஒதுக்கீடு என்றெல்லாம் பேசுகிறார்கள்.
-
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம் -
அதில் இருந்தது கோழி கால் இல்லை.. சொமாட்டோ பிரியாணி பார்சலில் இருந்தது? அலற விட்ட 28 நிமிட வீடியோ -
சிங்காநல்லூர் வாய்ப்பில்லை.. பல்லடம் தொகுதியில் அண்ணாமலையை நிற்க சொல்லுங்க.. மறுக்கும் அதிமுக!












Click it and Unblock the Notifications