ஆட்சியில் பங்கு-தங்கபாலு தலைமையில் காங். அவசர ஆலோசனை
சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக பேசப்பட்டதாக தெரிகிறது.
தமிழக காங்கிரசில் கோஷ்டி பூசலுக்கு என்றுமே பஞ்சம் கிடையாது. ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு கோஷ்டி சொல்வதை மற்ற கோஷ்டி கேட்காது. இப்படி தங்களுக்குள்ளே மாற்றி மாற்றி சண்டை போடும் தமிழக காங்கிரசார்கள் ஒற்றுமையுடன் எடுத்த முடிவு தமிழகத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது என்பது.
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவே இது குறித்து திமுகவிடம் காங்கிரசார்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும், சோனியா காந்தியிடம் ஆலோசனை நடத்தப்போவதகாக தெரிவித்தனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.
தற்போது காங்கிரசார் மீண்டும் ஆட்சியில் பங்கு என்ற கோரிக்கையை முன்வைக்க இருக்கின்றனர். இதற்காக காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்க்ளின் அவசர கூட்டம் நேற்று காலை சுமார் 11 மணிக்கு சத்தியமூர்த்தி பவனில் நடந்தது.
தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம், பீட்டர் அல்போன்ஸ், யசோதா, ஞானசேகரன், காயத்ரி தேவி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் பங்கேற்றனர்.
சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஆட்சியில் பங்கு கேட்பது தொடர்பாக காங்கிரஸ் கட்சியினர் பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் எம்எல்ஏக்கள், ராகுல் காந்தியுடன் விவாதிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
ஒரு வேளை ஆட்சியில் பங்களிக்க திமுக மறுத்தவிட்டால் அடுத்த சட்டசபை கூட்டத் தொடரில் அரசின் செயல்பாடுகளை காங்கிரஸ் விமர்சிக்கும் என கூறப்படுகிறது.
-
சென்னை உட்பட.. 30 மாவட்டங்களுக்கு பறந்த மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
Gold Price: மீண்டும் எகிறிய தங்கம் விலை.. ஒரே நாளில் தாறுமாறாக உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம் -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது












Click it and Unblock the Notifications