மத்திய அரசு அலுவலகங்களில் ரெய்ட்-ரூ. 2.25 கோடி சிக்கியது
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதைனையில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி மதிப்பு கொண்ட சொத்து பத்திரங்கள் சிக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக சிபிஐ போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் சென்னை, சிவகாசி, புதுச்சேரி இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய அரசு அலுவலகங்களான வருமான வரித்துறை, தபால்துறை மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டலம் உள்ளிட்ட 15 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி சொத்துக்களை சிபிஐ போலீசார் கண்டுபிடித்தனர். சிலர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர். சிலர் மீது வருமானத்துக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் வழக்கு தொடரப்ப்டடது.
புதுச்சேரியில் போலீஸ் வீட்டில் சோதனை...
புதுச்சேரியில் போலீசாருக்கு ஹெல்மேட் வழங்குவதில் முறைகேடு இருப்பதாக புகார் வந்ததையடுத்து காவல்துறை தலைமையக எஸ்பி ராமச்சந்திரன் வீட்டில் சிபிஐ போலீசார் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவர்கள் காவல்துறை தலைமையகத்தில் வேலை பார்த்து வரும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
-
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
கேஸ் பிரச்சனை எப்போது சரியாகும்.. வெளியான குட்நியூஸ்.. மக்கள் அறிய வேண்டியவை -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
ஸ்ட்ரெச்சரில் படுத்தபடி சென்னையில் 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவன்.. சொல்ல சொல்ல ஆசிரியை எழுதிய விடை -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!










Click it and Unblock the Notifications