மத்திய அரசு அலுவலகங்களில் ரெய்ட்-ரூ. 2.25 கோடி சிக்கியது
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் சிபிஐ நடத்திய அதிரடி சோதைனையில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி மதிப்பு கொண்ட சொத்து பத்திரங்கள் சிக்கியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் லஞ்சம் வாங்குவதாக சிபிஐ போலீசாருக்கு புகார் வந்தது. இதையடுத்து அவர்கள் சென்னை, சிவகாசி, புதுச்சேரி இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மத்திய அரசு அலுவலகங்களான வருமான வரித்துறை, தபால்துறை மற்றும் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவின் சென்னை மண்டலம் உள்ளிட்ட 15 இடங்களில் அவர்கள் சோதனை நடத்தினர்.
இதில் கணக்கில் வராத ரூ. 2.25 கோடி சொத்துக்களை சிபிஐ போலீசார் கண்டுபிடித்தனர். சிலர் லஞ்சம் வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டனர். சிலர் மீது வருமானத்துக்கு கூடுதலாக சொத்து சேர்த்ததாகவும், அதிகார துஷ்பிரயோகம் செய்வதாகவும் வழக்கு தொடரப்ப்டடது.
புதுச்சேரியில் போலீஸ் வீட்டில் சோதனை...
புதுச்சேரியில் போலீசாருக்கு ஹெல்மேட் வழங்குவதில் முறைகேடு இருப்பதாக புகார் வந்ததையடுத்து காவல்துறை தலைமையக எஸ்பி ராமச்சந்திரன் வீட்டில் சிபிஐ போலீசார் சோதனையிட்டனர். அதில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
பின்னர் அவர்கள் காவல்துறை தலைமையகத்தில் வேலை பார்த்து வரும் இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் வீட்டிலும் சோதனை நடத்தினர்.