For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெடி மருந்து வெடித்து 5 பேர் படுகாயம்

By Staff
Google Oneindia Tamil News

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே கல்வராயன்மலை அருகில் அனுமதி பெறாமல் வைத்திருந்த பட்டாசுகள், நாட்டு வெடி குண்டு தயாரிக்க பயன்படும் மருந்துகள் வெடித்து 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

கள்ளக்குறிச்சி அருகே உள்ளது கல்வராயன்மலை. இதன் அருகில் உள்ள வெள்ளிமலை பகுதியை சேர்ந்தவர் டெஸ்மோல் (39).

இவர் தனது கடையில் பட்டாசுகள், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க தேவையான கரி, மருந்துகள் ஆகியவற்றை அனுமதியின்றி விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடையில் வைக்கப்பட்டிருந்த அந்த நாட்டு வெடிகுண்டு மருந்துகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்தது.

இதில் கடையில் தாய்மொழிப்பட்டு ஆண்டியப்பன் (22), கோவிந்தராஜ் (19), மேல்வாழப்பாடி தர்மலிங்கம் (31), குள்ளன் (32), வெள்ளையம்மாள் (40) ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

இதனையடுத்து, அவர்களை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X