வெல்டிங்குமார் கொலை எதிரொலி - சிறைத்துறை டிஜிபி நடராஜ் மாற்றம்

சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரவுடி வெல்டிங்குமார் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
புழல் சிறையில் நேற்று முன்தினம், கைதிகளுக்குள் ஏற்பட்ட மோதலில் வெல்டிங்குமார் இரும்புக் கம்பிகளால் சரமாரியாகக் குத்திக் கொலை செய்யப்பட்டார்.
இதையடுத்து, தலைமைக் காவலர் குணசேகரன், தலைமை வார்டன் குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சிறைத்துறை டிஜிபி நட்ராஜ் நேற்று காலை உத்தரவிட்டார்.
ஜெயிலர் அன்சர் பாஷா, துணை கண்காணிப்பாளர் சவுந்திரராஜன் ஆகியோரை வேறு சிறைகளுக்கு மாற்றுமாறு அரசுக்கு பரிந்துரை செய்தார். அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டது. சிறைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரனுக்கு விளக்கம் கேட்டு மெமோ கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில், நடராஜ் மீதும் தற்போது நடவடிக்கை பாய்ந்துள்ளது. அவரை தீயணைப்புத் துறை இயக்குநராக மாற்றி அரசு உத்தரவிட்டுள்ளது.
தீயணைப்புத் துறை இயக்குநராக இருந்து வந்த ஷியாம் சுந்தர் புதிய சிறைத்துறை கூடுதல் டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் மாற்றங்களைக் கொண்டு வந்த நடராஜ்...
முன்பு ஜெயலலிதாவை புகழ்ந்து பேசப் போய் சென்னை மாநகர ஆணையர் பதவியிலிருந்து மாற்றப்பட்டார் நடராஜ். அதன் பின்னர் அவர் முக்கியப் பதவிகளில் இல்லாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில்தான் சிறைத்துறைக்கு அவர் மாற்றப்பட்டார். சிறைத்துறைத் தலைவராக வந்த பின்னர் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு வந்தார். சிறைகளில் கைதிகளுக்கு தேர்வு எழுத அனுமதி, கைதிகளை குடும்பத்தினருடன் சந்திக்கும் நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு மாற்றங்களை அவர் கொண்டு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்றார்.
சிறைச்சாலைகளுக்குள் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுக்கும் நடவடிக்கைகளையும் அவர் செய்து வந்தார்.
நடராஜ் சிறைக்குள் நடக்கும் ரவுடி ராஜ்ஜியத்தை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுத்துள்ளார். ஆனால், அவருக்கு கீழ் செயல்பட்ட அதிகாரிகள் அரசியல் செல்வாக்கோடு செயல்பட்டு தனி ராஜ்ஜியம் நடத்தி வருகின்றனராம். இதனால் நடராஜின் நடவடிக்கைகளுக்கு முழு பலனும் இல்லாமல் போய் விட்டது.
சமீபத்தில் சில கைதிகளிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தபோது அவர்கள், சில சிறை ஊழியர்களின் தூண்டுதலின்பேரில் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டி போராட்டம் நடத்தினார்கள்.
டி.ஜி.பி. நடராஜ் மட்டும் கடும் நடவடிக்கை எடுத்தபோதும், மற்ற ஊழியர்கள் ஒத்துழைப்பு இல்லாததால் சிறைத்துறை நிர்வாகம் சீரழிந்துபோய் விட்டதாக சிறைத்துறை ஊழியர்களே வருத்தத்துடன் கூறுகின்றனர்.
இப்படி சிறைத்துறையில் உள்ள சிலரின் ஒத்துழைப்புக் குறைவாலும், கவனக்குறைவாலும், அலட்சியத்தாலும், நடந்து விட்ட ஒரு ரவுடி கொலையால் தனது பதவியை இழந்துள்ளார் நடராஜ்.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
கோல்டன் என்ட்ரி கொடுக்கும் 'தங்கப்' பேருந்து.. சென்னை சாலைகளில் இனி 'ராயல்' பயணம்.. சூப்பர் முடிவு! -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
"சாப்பாடு கிடையாது”.. சென்னையில் மக்களை அதிரவைத்த ஹோட்டல் அறிவிப்பு பலகை.. கேஸ் தட்டுப்பாட்டால் ஷாக் -
சென்னை விடுதிகளில் டீ, காபி கிடையாது.. PG-க்கள் அறிவிப்பு! பேச்சுலர்களுக்கு திண்டாட்டம்தான்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
பட்டா காத்திருந்தவர்களுக்கு ஜாக்பாட்.. 5952 மனுக்களில் குட் நியூஸ்.. கோவை, சென்னையில் 24 மணி அதிசயம் -
மின்சார வாரியம் சர்ப்ரைஸ்.. தமிழகத்தில் திடீர்னு ஏறிய கரண்ட் தேவை! உடனே வந்த மின்வாரிய ஹேப்பி நியூஸ் -
சொத்து வரியின் பயன்கள்.. இது எப்படி கணக்கிடப்படுகிறது? வரி கட்டாவிட்டால் ஜப்தி வருமா? அறியாத தகவல் -
கூடுவாஞ்சேரியில் நள்ளிரவில் நடந்த தீவிபத்து! ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உடல் கருகி பலி!












Click it and Unblock the Notifications