ஜூலை 6 முதல் எம்பிபிஎஸ் சேர்க்கை கவுன்சிலிங்
சென்னை: எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளி்ல் சேருவதற்கான முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
தமிழகத்தில் 15 அரசு மருத்துவக் கல்லூரிகள், 4 தனியார் மருத்துவ கல்லூரிகளில் 1734 எம்பிபிஎஸ் இடங்கள் உள்ளன.
அரசு பல் மருத்துவக் கல்லூரிகளி்ல் 100 இடங்களும், தனியார் பல் மருத்துவ கல்லூரிகளில் 847 இடங்களும் உள்ளன.
இந்த இடங்களி்ல் சேருவதற்கு கடந்த 10 நாட்களாக விண்ணப்பங்கள் வினியோகப்பட்டு வருகின்றன. நேற்று வரை 15,000 விண்ணப்பங்கள் விற்கப்பட்டுள்ளன.
இதுவரை 6,000 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாள் 17ம் தேதியாகும்.
இந் நிலையில் முதல் கட்ட மருத்துவ கவுன்சிலிங் ஜூலை 6ம் தேதி தொடங்கி 17ம் தேதி வரை 11 நாட்கள் நடக்கிறது.
போட்டி மிகக் கடுமையாக உள்ளதால் கடந்த ஆண்டை விட கட்-ஆப் மார்க் இந்த ஆண்டு 0.25 முதல் 0.50 வரை உயரும் என்று தெரிகிறது.
இதற்கிடையே 2009-10ம் ஆண்டுக்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பல் மருத்துவ மேற்படிப்பு, 5 வருட நரம்பியல் அறுவை சிகிச்சை படிப்பு (எல்.சி.எச்) ஆகியவற்றுக்கான 2வது கட்ட கவுன்சிலிங் வரும்16ம் தேதி முதல் 18ம் தேதி வரை 3 நாட்கள் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி ஆடிட்டோரியத்தில் நடைபெறுகிறது.
அதே போல எம்.பி.டி., எம்.எஸ்.சி. நர்சிங் படிப்பிற்கான கவுன்சிலிங் 22ம் தேதி நடக்கிறது. எம்.பார்மசி படிப்பிற்கான கவுன்சிலிங் 23ம் தேதி நடக்கிறது.
மருத்துவ கல்வி இயக்குனரக தேர்வு குழு இந்த கவுன்சிலிங்கை நடத்தும்.
இது குறித்த மேலும் விவரங்கள் பெற: www.tnhealth.org, www.tngov.in












Click it and Unblock the Notifications