'தட்ஸ்தமிழ்' எதிரொலி-குற்றாலம் அருட்காட்சியகத்தில் அமைச்சர் ஆய்வு
குற்றாலத்தில் தமிழக அரசின் தொல்பொருள் அருட்காட்சியகம் உள்ளது. சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் அரிய பொக்கிஷங்கள் இருக்கின்றன.
ஆனால், இவை போதிய பராமரிப்பு இல்லாமல் சாலைகளில் கிடப்பாதாக தட்ஸ்தமிழ் 'அழிந்துவிடும் அபாயத்தில் குற்றால தொல்பொருள் அருட்காட்சியம்' என்ற தலைப்பில் கடந்த 9ம் தேதி செய்தி வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த அருட்காட்சியகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்ய தமிழக பள்ளிக் கல்வி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று திடீரென வந்தார். அருட்காட்சியகத்தை நல்ல முறையில் பராமரிக்குமாறு அறிவுறுத்தியதுடன் அரசு சார்பில் வேண்டிய நிதி ஓதுக்கீடு செய்ய ஏற்பாடு செய்வதாகவும் அவர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன், ஒன்றிய செயலாளர்கள் தென்காசி ராமையா என்ற துரை, மேலநீலிதநல்லூர் துரைராஜ், கடையநல்லூர் காசிதர்மம் துரை, செங்கோட்டை அரசு போக்குவரத்து கழக தெமுச செயலாளர் முத்துபாண்டியன் உட்பட பலர் உடனிருந்தனர்.
முந்தைய செய்தி: அழிந்துவிடும் அபாயத்தில் தொல்பொருள் அருட்காட்சியம்