For Daily Alerts
Just In
கேபியை பிடிக்க இன்டர்போல் உதவி நாடும் இலங்கை
இது குறித்து அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரோஹித போகலகாமா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில்,
விடுதலைப் புலிகளை தோற்கடித்து பயங்கரவாதத்தை நாம் வெற்றிகரமாக எதிர் கொண்டிருக்கலாம். ஆனால், அதே சமயம் நாம் இன்னும் நிறைய செய்ய வேண்டியது பாக்கியிருக்கிறது.
புலிகளின் சர்வதேச பொறுப்பாளரான கே.பி என்ற கே.பத்மநாபனைப் பிடிக்க இன்டர்போல் உதவி நாடப்பட்டுள்ளது. அவரைப் பற்றிய விவரங்களை பிற நாடுகளுக்கு இலங்கை அரசு வழங்கியுள்ளது.
இவர் புலிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்கள் இறக்குமதி செய்வதில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார் என்றார்.
கடந்த ஜனவரி மாதம் குமரன் பத்மநாதனை புலிகளின் சர்வதேச பொறுப்பாளராக பிரபாகரன் நியமித்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Monday, June 15, 2009, 13:54 [IST]