அரிவாள் மனையால் கழுத்தை அறுத்து 5 பவுன் தங்க சங்கிலி பறிப்பு
சென்னை: சென்னையில் பெண்ணின் கழுத்தை அரிவாள் மனையில் வெட்டி 5 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்து சென்றவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை நெசப்பாக்கத்தை சேர்ந்த குணசேகரன் பழைய பேப்பர், இரும்பு பொருட்கள் வாங்கும் வியாபாரம் பார்த்து வருகிறார். இவரது மனைவி அன்னலட்சுமி (28) தற்போது ஐந்து மாத கர்ப்பிணியாக இருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 13ம் தேதி அன்னலட்சுமி மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அவர் தனியாக இருப்பதை அறிந்த கொண்ட அந்த வீட்டு உரிமையாளரின் வளர்ப்பு மகன் ஆனந்த், அன்னலட்சுமியின் 5 பவுன் நகையை பறிக்க முயன்றார். ஆனந்த் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் என்ஜினியரிங் கல்லூரியில் பஸ் டிரைவாக வேலை பார்த்து வருகிறார்.
இதையடுத்து சுதாரித்து கொண்ட அன்னலட்சுமி சத்தமிட்டு அருகிலிருந்தவர்களை உதவிக்கு கூப்பிட முயன்றார். இதையடுத்து ஆத்திரமடைந்த ஆனந்தன் வீட்டிலிருந்த அரிவாள் மனையால் அன்னலட்சுமியின் கழுத்தில் வெட்டினார்.
இதில் படுகாயமடைந்த அன்னலட்சுமி சுருண்டு விழுந்தார். ஆனந்தன் 5 பவுன் தங்க சங்கிலியுடன் தப்பித்து ஓடிவிட்டான். பின்னர் அவர் வீட்டுக்கு வெளியே வந்து அந்த பக்கம் வந்தவர்களிடம் தன்னை காப்பாற்றுமாறு சைகை காட்டினார். இதையடுத்து அருகிலிருந்தவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
அரிவாள் மனை பழையது என்பதால் வெட்டு ஆழமாக விழவில்லை. இதையடுத்து அவர் உயிர்பிழைத்தார். டாக்டர்கள் அவருக்கு கழுத்தில் தையல் போட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட போலீசார் மருத்துவமனை சென்று அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் வீட்டு உரிமையாளர் மகன் தான் இதற்கு காரணம் என பேப்பரில் எழுதி காட்டினார்.
இதையடுத்து போலீசார் ராமாவரத்தில் உள்ள ஆனந்தனின் வீட்டு சென்று தேடினார். ஆனால், அவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். அவர் வீட்டில் ரத்தக்கறை படிந்த ஒரு சட்டையை போலீசார் கண்டெடுத்தனர். போலீசார் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்
-
"ஸ்டாக் இல்லை" சென்னை கடைகளில் மளமளவென காலியாகும் இண்டக்ஷன் ஸ்டவ்-கள்! நேரடி கள ரிப்போர்ட்! -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன் -
சிங்கப்பூரில் 4000 டாலர் சம்பளம்.. லேடீஸ் ஹாஸ்டல் ஐஸ்வர்யா மாஸ்டர் பிளானில் சிக்கிய பரிதாப பெண்கள் -
சென்னையில் தங்க ரதம்.. கண்டக்டர் இல்லாத பஸ்கள் அறிமுகம் செய்த அரசு.. எந்த ரூட்டில் இயக்கம்? -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
LPG Shortage: சமையல் கேஸ் சிலிண்டர் புக் செய்ய முடியவில்லையா! இந்த App-ல் டிரை செய்து பாருங்க! -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
வீட்டில் இருக்குற தண்ணி டேங்க் மட்டும் தான் கழட்டிட்டு வரல.. திரும்பி பார்க்க வைத்த சென்னைவாசி -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை!











Click it and Unblock the Notifications