'தில்லு முல்லு கட்சி' தான் திமுக!-ராமதாஸ்

திருவண்ணாமலை மாவட்ட பா.ம.க. பொதுக்குழு கூட்டம் சேத்துப்பட்டில் நடந்தது. அதில் ராமதாஸ் பேசுகையில்,
திருவண்ணாமலை மாவட்டத்தை திமுக கோட்டை என்கிறார்கள். ஆனால், இது நம் கோட்டை. நாம் ஓட்டு போட்டு இருக்காவிட்டால் வேலு அமைச்சர் ஆகி இருக்க முடியுமா?. நாம் ஜெயிக்க வைத்த அமைச்சர்கள் இன்று குழு அமைத்து நம்மை கூட்டணியில் இருந்து கழற்றி விட வேலை செய்தார்கள்.
திமுக என்றால் தில்லு முல்லு கட்சி என்று பொருள். திமுகவின் 5 பெரும் தலைவர்களை ஓரம் கட்டியவர்தான் கருணாநிதி. வரும் தேர்தல்களில் திமுகவின் தில்லுமுல்லை தடுத்து நிறுத்துவோம். வரும் தேர்தலில் பணம் செலவு செய்யாமல் நாம் வெற்றி பெற வேண்டும்.
தேர்தல் செலவுக்கு இனி பணம் வழங்க முடியாது. வரும் ஜூலை மாதத்துக்குள் உள்கட்சி தேர்தலை முடிக்க வேண்டும். இளைஞர் மற்றும் பெண்களுக்கு பொறுப்புகள் வழங்க வேண்டும்.
வளர்ந்த நாடுகளான அமெரிக்கா, ஜப்பானில் கூட எலக்ட்ரானிக் எந் திரத்துக்கு பதில் ஓட்டு சீட்டு முறையில் தான் தேர்தல் நடத்துகிறார்கள். இந்தியாவிலும் ஓட்டு சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications