பங்குச் சந்தை: இன்றும் மந்த நிலைதான்!
மும்பை: இந்திய பங்குச் சந்தையில் இன்றும் தடுமாற்றத்துடனேயே வர்த்தகம் நடந்தது.
காலையில் வர்த்தகம் துவங்கிய சிறிது நேரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சென்செக்ஸ் புள்ளிகள் வீழ்ச்சியடையத் துவங்கின. 253 புள்ளிகளை வேகமாக இழந்தது சென்செக்ஸ். பின்னர் மெதுவாக மீட்சியடையத் துவங்கியது.
வர்த்தக நேர முடிவில் 80 புள்ளிகளை கூடுதலாகப் பெற்றது சென்செக்ஸ்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் இதே நிலைதான். 33 புள்ளிகள் கூடுதலுடன் வர்த்தகம் நிறைவுற்றது.
இன்றைய பங்குப் பரிமாற்றத்தில் வங்கிகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறை பங்குகள் ஓரளவு நல்ல லாபத்தில் கைமாறின.
ரிலையன்ஸ் இன்ப்ரா, ஸ்டேட் பாங்கி ஆப் இந்தியா, ஜெய்பிரகாஷ் அஸோஸியேட்ஸ், டாடா பவர் மற்றும் ஹிண்டால்கோ பங்குகள் அதிக லாபம் பெற்றுத் தந்தன.
இன்றைய வர்த்தகத்தில் அதிக நஷ்டம் ஏற்படுத்தியது டாடா கன்ஸல்டன்ஸி சர்வீஸஸ் நிறுவனப் பங்குகளே. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் இன்றும் நஷ்டத்தை ஏற்படுத்தின.