கிழக்கு இலங்கையில் மீன்பிடிக்க தடை நீக்கம்
கொழும்பு: விடுதலைப் புலிகளுடான போர் முடிவடைந்து விட்டதால், கிழக்கு மாகாணத்தில் மீன் பிடிக்க விதிக்கப்பட்டிருந்த தடையை அரசு நீக்கியுள்ளது.
இதையடுத்து பகல் நேரம் முழுவதும் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது.
அதிபர் ராஜபக்சேவின் ஆலோசனையின் பேரில் இந்த உத்தரவை வெளியிட்டுள்ளது இலங்கை அரசு. கிழக்கு கடல் பகுதியில், திரிகோணமலை துறைமுகப் பகுதி நீங்கலான பிற பகுதிகளில், பகல் நேரங்களில் மீனவர்கள் மீன் பிடிக்கலாம் என ராஜபக்சேவின் தம்பியும், அதிபரின் மூத்த ஆலோசகருமான பசில் ராஜபக்சே கூறியுள்ளார்.
முன்பு குறிப்பிட்ட சில நேரத்தில் மட்டுமே மீன் பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும் திரிகோணமலை துறைமுகப் பகுதியில் மீன் பிடிக்க நிரந்தரத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
தற்போது துறைமுகப் பகுதியில், காலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை மீன் பிடிக்க மீனவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருப்பினும் கடற்படையின் அனுமதியைப் பெற்ற பின்னரே துறைமுகம் உள்ள கடல் பகுதிக்குள் மீனவர்களின் படகுகள் நுழையலாம்.