மூளைச்சாவு-சாப்ட்வேர் என்ஜினியர் உடல் தானம்
சென்னை: சென்னையில் நடந்த விபத்தில் மூளைச் சாவை சந்தித்த சாப்ட்வேர் என்ஜினியர் ஒருவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்ட.
கும்பகோணம் கம்பட்ட விஸ்வநாதர் வடக்கு தெருவை சேர்ந்த சிங்காரமணி (24) சென்னை மேற்கு மாம்பலத்தில் ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் இம் மாத ஆரம்பத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
இவரது தந்தை பாஸ்கர் மற்றும் தாயார் செந்தமிழ் செல்வி ஆகியோர் கும்பகோணத்தில் வசித்து வருகின்றனர்.
நேற்றிரவு சாப்பிடுவதற்காக ஹோட்டலுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக அதிவேகமாக வந்த மோட்டார் பைக் அவர் மீது மோதியது. அதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சுய நினைவை இழந்தார். இதையடுத்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரது பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்ப்டடது. இந்நிலையில் அவருக்கு சுயநினைவு திரும்பாததை அடுத்து மேல்சிகிக்சைக்காக சென்னை அப்பலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது அவர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது பெற்றோர்கள் அவரது உடலை தானம் கொடுக்க முன் வந்தனர். அவரது ஒரு சிறுநீரகமும், நுரையீரலும் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இரண்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட இருக்கிறது. இதயம் பிரண்டியர் லைப்லைன் மருத்துவமனைக்கும், கண்கள் இரண்டும் அகர்வால் கண் மருத்துவமனைக்கும் வழங்கப்பட இருப்பதாக தெரிகிறது.
இது குறித்து மூளைச்சாவு அடைந்த சிங்காரமணியின் தந்தை பாஸ்கர் கூறுகையில்,
கடந்த வாரம் தான் எனது மகன் சென்னைக்கு வந்தான். இந்த வாரம் அவனை உயிரோடு பார்க்க முடியவில்லை. என் மகனின் உறுப்புகள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட வேண்டும் என டாக்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். 24 ஆண்டுகளாக வளர்ந்த பிள்ளையை பறிகொடுத்து நிற்கிறோம் என்றார்.
-
கோயம்பேட்டில் மூட்டை மூட்டையாக தேங்கி கிடக்கும் காய்கறிகள்.. வியாபாரிகள் கனவிலும் நினைக்காத மாற்றம் -
கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையத்திற்கு.. 'கலைஞர்' பெயர்! தமிழ்நாடு அரசு ஒப்புதல் -
சென்னையிலுள்ள தங்கும் ஹோட்டல்கள் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை எப்படி சமாளிக்கின்றன தெரியுமா? -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
பரங்கிமலை இன்று முதல் சென்னையின் ‘ஹாட்ஸ்பாட்’.. கடற்கரை - பரங்கிமலை பறக்கும் ரயில் அட்டவணை வெளியீடு! -
கூவத்தின் மீது 15 கி.மீ வித்தை.. டெட் லைன் குறிச்சாச்சு! சென்னையில் வரும் பிரம்மாண்ட 2 அடுக்கு பாலம் -
சென்னையில் திருச்சி மாணவி பாலியல் வன்கொடுமை புகார் பொய்யானது! அபிராமபுரம் போலீஸ் விளக்கம் -
கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்படும்.. தமிழக அரசு அதிரடி எச்சரிக்கை.. என்னாச்சு? -
பயப்பட வேண்டாம்.. தமிழ்நாட்டில் பெட்ரோல் தட்டுப்பாடே இல்லை.. பங்க் உரிமையாளர்கள் விளக்கம்! -
13 வயது சிறுமியை 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு.. விசாரணையை சென்னைக்கு மாற்ற தந்தை கோரிக்கை -
சென்னையில் மூடப்பட்ட பங்குகள்.. பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு! இப்படியே போனா கஷ்டம் -
உரிமைத் தொகை ₹1000 பதில் 2000 தந்தால்? சென்னை டூ திருச்சி சிறுமி சம்பவத்தில் பொங்கிய டிடிவி தினகரன்












Click it and Unblock the Notifications