தவறான மருத்துவ சான்றிதழ்: டாக்டர்களுக்கு ஆயுள் தண்டனை-வீரமணி
கடலூர்: திருமணத்துக்கு முன்பாக ஆணுக்கும், பெண்ணுக்கும் மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தவறான மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கும் டாக்டர்களுக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என திராவிட கழக தலைவர் வீரமணி தெரிவி்த்துள்ளார்.
கடலூரில் திருமண விழா ஒன்றில் திராவிட கழக தலைவர் வீரமணி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில்,
தமிழக முதல்வர் கருணாநிதி ஆட்சியில் பெண்கள் அமைதியாக வாழந்து வருகிறார்கள். ஒரு காலத்தில் பெண்கள் அடிமையாக இருந்த நிலை மாறி தற்போது நல்ல நிலையில் ஆண்களுக்கு சமமான நிலையில் முன்னேற்றம் அடைந்துள்ளனர்.
இதனால்தான் பெண்கள் விமானத்துறை, அமைச்சர் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் வளர்ந்து சாதனை படைத்து வருகின்றனர்.
பெண்கள் மூட நம்பிக்கை இல்லாமல் தன்னம்பிக்கையோடு வாழ வேண்டும். ஆண், பெண் இருவருக்கும் மருத்துவ சான்றிதழ் பெற்ற பிறகு திருமணங்கள் நடத்தப்பட வேண்டும். இதனால் குடும்பத்தில் எந்தவித பிரச்னையும் ஏற்படாது.
ஆனால் மருத்துவ சான்றிதழ்கள் கொடுக்கும் மருத்துவர்கள் தவறான சான்றிதழ் கொடுத்தால் அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கும்படி மருத்துவ சான்றிதழ் சட்டத்தில் கொண்டு வரவேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications