என்னை கொல்ல சதி-திமுக எம்பி ஜெயதுரை பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

Jeyadurai
தூத்துக்குடி: என்னை கொலை செய்ய சதி நடக்கிறது என்று தூத்துக்குடி தொகுதி திமுக எம்.பி ஜெயதுரை பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் தூத்துக்குடியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் டாக்டர் ஜெயதுரை.

தூத்துக்குடியில் இவரது அலுவலகம் முன்பு கொட்டகை போட்டுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்து கொள்ள ஜெயதுரை சென்ற போது அவரது அலுவலகத்திற்கு முன்பு இருந்த கீற்றுக் கொட்டகைத்து மர்ம நபர்கள் சிலர் தீவைத்து விட்டு தப்பி விட்டதாக கூறப்படுகிறது.

திமுக எம்பி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந் நிலையில் தொகுதி திமுக எம்பி எஸ்.ஆர்.ஜெயதுரை செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடியில் எனது வளர்ச்சியை பார்த்து பொறுத்துக் கொள்ள இயலாமல்
சிலர் என்னை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி, மற்றும் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆகியோரை சந்தித்து புகார் செய்ய உள்ளேன் என்றார்.

ஆளும் கட்சியைச் சேர்ந்த திமுக எம்பி ஒருவரே தம்மை சிலர் கொலை செய்ய முயற்சி செய்வதாக கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+