திருவாரூர் அருகே குலதெய்வம் கோவிலில் ஸ்டாலின் வழிபாடு
Subscribe to Oneindia Tamil

துணை முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டபின் ஸ்டாலின் முறையாக திருவாரூருக்கு வந்தார்.
காட்டூரில் உள்ள தனது பாட்டி அஞ்சுகம் அம்மாள் சமாதிக்கு தனது மனைவி துர்காவுடன் சென்று அஞ்சலி செலுத்தினார். அப்போது, சமாதியில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, காட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
காட்டூர் சமாதியில் அஞ்சலி செலுத்திய பின்பு, தனது சொந்த ஊரான திருக்குவளை கிராமத்திற்குச் சென்று அங்குள்ள குடும்ப குலதெய்வமான அங்காள பரமேஸ்வரி கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
அப்போது துணை முதல்வர் ஸ்டாலினுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பான வரேவற்பு கொடுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications