சென்னையில் பயோ டீசல் தயாரிப்பு பிரிவை தொடங்கும் ரயில்வே
Subscribe to Oneindia Tamil

சென்னை பெரம்பூரில் உள்ள தெற்கு ரயில்வே லோகோ ஒர்க்ஸ் பணிமனையில் தொடங்கப்படும் இந்தப் பிரிவில் 1 லட்சம் லிட்டர் பயோ டீசல் தயாரிக்கப்படும்.
இந்திய ரயில்வேயின் மாற்று எரிபொருள் கழகமும், தெற்கு ரயில்வேயும் இணைந்து உருவாக்கும் இந்தப் பிரிவு 2010ம் ஆண்டுக்குள் தனது உற்பத்தியைத் தொடங்கும்.
ஜெட்ரோபா உள்ளிட்டவற்றின் விதைகளிலிருந்து எண்ணெய் எடுக்கப்பட்டு பயோ டீசல் தயாரிக்கப்படும்.
இங்கு தயாரிக்கப்படும் பயோ டீசல் முழுக்க முழுக்க ரயில்வேயின் தேவைக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications