தினமும் மாயமாகும் 30 ஈழத் தமிழர்கள்!
கொழும்பு: இலங்கையில் அகதிகள் முகாம்களில் தினமும் 30க்கும் மேற்பட்ட தமிழர்கள் மாயமாகிவிடுகின்றனர். ராணுவத்தால் விசாரணைக்கு அழைத்து செல்லப்படும் இவர்கள் திரும்பவுதில்லை என ஆசிய மனித உரிமை ஆணையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
இலங்கையில் நடந்த இனப்போரில் ராணுவம் அப்பாவி தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்று குவித்தது. தற்போது போர் முடிந்த நிலையில் வடக்கு இலங்கையில் சுமார் 3 லட்சம் தமிழர்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக முகாம்களில் அவதிப்பட்டு வருகின்றனர்.
அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் அடிப்படை வசதிகள் கூட சரிவர கிடைக்கவில்லை. ஒருவர் தங்க கூடிய இடத்தில் 10க்கும் மேற்பேட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களது நிலைமை குறித்து பல்வேறு நாட்டை சேர்ந்த அமைப்புகளும் வருத்தம் தெரிவித்து வருகிறது. ஆனால், யாராலும் ஈழத் தமிழர்களின் இதயத்தில் வழியும் ரத்தத்தை துடைக்க முடியவில்லை.
இந்நிலையில் இலங்கை ராணுவத்தினர் விடுதலை புலிகள் முகாம்களில் தங்கியிருக்கிறார்களா என சோதனையிடுகிறேன் என கூறி கொண்டு அங்கிருக்கும் தமிழ் இளைஞர்களை விசாரணைக்கு அழைத்து செல்கின்றனர்.
முதலை வாயுக்குள் சென்ற ஆடாக விசாரணைக்கு சென்றவர்கள் இதுவரை திரும்பி வந்ததில்லை என முகாம்களில் இருப்பவர்கள் சோகமாக தெரிவித்து வருகின்றனர்.
இதை ஆசிய மனித உரிமை ஆணையமும் உறுதி செய்துள்ளது. அது வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில்,
இலங்கை ராணுவம் தினமும் விடுதலை புலிகளுக்கு தொடர்பு உள்ளவர்கள் என கூறி பலரையும் அழைத்து செல்கிறது. ஆனால், அவர்கள் திரும்பி வருவது இல்லை. அவர்கள் நிலைமை என்ன ஆனது என்பது தெரியவில்லை. ஒரு நாளைக்கு 30க்கம் மேற்பட்ட தமிழர்கள் முகாம்களில் இருந்து காணாமல் போகிறார்கள்.
இதனால் முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இலங்கை அரசு முகாம்களில் இருப்பவர்களை எண்ணி, பதிவு செய்ய வேண்டும். முகாம்களில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை சரியாக இருக்கிறதா என்பதை சோதிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications