கூடுதல் பாதுகாப்பு வழங்குமாறு ப.சிதம்பரத்திடம் வருண் கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜக இளம் எம்.பியான வருண் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை நேரில் சந்தித்து தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கோரிக்கை விடுத்தார்.

உ.பி. மாநிலம் பிலிபித் தொகுதி தேர்தல் பிரசாரத்தின்போது வருண் காந்தி, முஸ்லீம்களுக்கு எதிராக பேசியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதுதொடர்பாக அவர் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இனிமேல் இப்படிப் பேச மாட்டேன் என வருண் காந்தி உத்தரவாதம் அளித்ததால் அவருக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்தது. பின்னர் தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி. ஆனார் வருண்.

தேர்தல் பிரசாரத்தின்போது தனக்கு பாதுகாப்பு தேவை என்று வருண் காந்தி கோரியதால் அவருக்கு இயந்திரத் துப்பாக்கியுடன் கூடிய போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. தேர்தலுக்குப் பின்னர் எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அவருக்கு தரப்பட்டது.

இந்த நிலையில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை வருண் காந்தி சந்தித்தார். அப்போது, தனக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்குமாறு கோரி மனு அளித்தார் வருண் காந்தி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+