சாயக் கழிவை ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு சீல்
ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெரியசேமூர், பெரிய அக்ரஹாரம் பகுதியில் கழிவுநீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி தொழிலின் ஒரு அங்கமான நூலுக்கு சாயம் போடும் தொழிலில் சுமார் 500 க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன.
பெரியசேமூர், பெரிய அக்ரஹாரம் பகுதியில் 20 க்கும் மேற்பட்ட சாயப்ட்டறைகள் இயங்கி வருகின்றன.
இந்ச சாயப்பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரை சுத்திரிகரிப்பு செய்யாமல் வெளியே விட்ட வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில், கழிவு நீரை சுத்திகரிப்பு செய்யாமல் ஆற்றில் விட்ட 11 சாயப்பட்டறைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு கடந்த 2008 -ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சீல் அதிகாரிகள் சீல் வைத்தனர்.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட இந்த சாயப் பட்டறைகளை சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு தெரியாமலே இயங்கி வந்துள்ளனர். இது குறித்து பொது மக்கள் புகார் கூறினர்.
இந்த நிலையில் சீல் வைக்கப்பட்ட சாய்ப்பட்டறைகள் மீண்டும் இயங்குவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட இந்த சாயப்பட்டறைகளின் அதிபர்கள் அவர்களே அந்த சீலை அகற்றி சாயப் பட்டறைகளை இயக்கி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அந்த 11 சாயப்பட்டறைகளுக்கும் அதிகாரிகள் இன்று மீண்டும் சீல் வைத்தனர்.