தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கைக்கு மெடிக்கல் கவுன்சில் தடை

இதுதொடர்பான அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது கவுன்சில். இதன் காரணமாக குறைந்தது 100 சீட்கள் தமிழகத்தில் இந்த ஆண்டு குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் கடந்த ஆண்டு சேர்க்கப்பட்டனர். இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து மருத்துவக் கல்வித்துறை இயக்குநர் டாக்டர் விநாயகம் கூறுகையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தர்மபுரி மருத்துவக் கல்லூரியில் கவுன்சில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அப்போது 15 குறைபாடுகள் இருப்பதாக தெரிவித்தனர். அவற்றில் முக்கியமானது கட்டட பற்றாக்குறை.
மேலும், நூலகத்தில் போதிய நூல்கள் இல்லை எனவும் தெரிவித்தனர். இவற்றை முடிந்த அளவுக்கு நிவர்த்தி செய்து விட்டோம்.
பின்னர் 2வது முறையாக ஆய்வுக்கு வந்தனர். இந்த நிலையில், இப்போது மாணவர் சேர்க்கைக்கு அனுமதி இல்லை என்று அவர்கள் தெரிவித்திருப்பதற்கான காரணம் புரியவில்லை.
மேலும், மருத்துவக் கவுன்சிலிடமிருந்து இதுவரை எங்களுக்கு எந்தத் தகவலும் இல்லை. அவர்களது இணையதளத்தைப் பார்த்துதான் நாங்கள் தெரிந்து கொள்ள முடிந்தது என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், நான் திங்கள்கிழமை டெல்லி செல்கிறேன். அங்கு சுகாதாரத் துறை அதிகாரிகளை சந்தித்து ஆலோசிக்கவுள்ளேன் என்றார்.
தற்போது தமிழகத்தில் மொத்தம் 15 அரசு மருத்துவக் கல்லூரிகள் (தர்மபுரியையும் சேர்த்து) உள்ளன. மொத்தம் 1483 மருத்துவ இடங்கள் உள்ளன. மருத்துவக் கவுன்சில் தனது முடிவை மாற்றிக் கொள்ளாவிட்டால் சீட்களின் எண்ணிக்கை 1383 ஆக குறைந்து விடும்.
-
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications