ஜமாத் நிர்வாகத்தில் மோதல்-13 பேர் மீது வழக்கு
Subscribe to Oneindia Tamil
கடலாடி: ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே முஸ்லிம் ஜமாத் நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து மோதலில் கொலை மிரட்டல் விடுத்த 13 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
வாலிநோக்கம் முஸ்லிம் ஜமாத் செயலாளராக சிக்கந்தர் இருந்து வருகிறார். நிர்வாக் குழு தேர்தலில் தோற்றுப்போன அப்துல் ரசாக் தரப்பினருக்கும், சிக்கந்தர் தரப்பினருக்கும் அடிக்கடி தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.
இதில், சிக்கந்தர் தரப்பினர் அப்துல் ரசாக் தரப்புக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, ஊராட்சி முன்னாள் தலைவர் அக்பர் அலி கொடுத்த புகாரின் பேரில் சிக்கந்தர் உள்பட 13 பேர் மீது சிக்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.












Click it and Unblock the Notifications