சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரைக்கும் பரவியது பன்றிக் காய்ச்சல்
மதுரை: சென்னை, கோவையைத் தொடர்ந்து மதுரைக்கும் பன்றிக் காய்ச்சல் பரவியுள்ளது. அமெரிக்காவிலிருந்து மதுரை திரும்பிய சிறுவனுக்கு பன்றிக் காய்ச்சல் அறிகுறி தோன்றியுள்ளதாக சந்தேகம் எழுந்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த அந்த சிறுவனின் பெயர் அனுஷம். 8 வயதாகும் இவர், தனது பெற்றோருடன் அமெரிக்கா போயிருந்தார். அங்கிருந்து மதுரை திரும்பிய அனுஷத்தை மதுரை விமான நிலையத்தில் மருத்துவ சோதனைக்குட்படுத்தினர்.
அப்போது அனுஷத்திற்கு பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள் இருப்பதாக தெரிய வந்தது.
இதையடுத்து உடனடியாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்குமாறு டாக்டர்கள் அனுஷத்தின் பெற்றோரை அறிவுறுத்தினர். ஆனால் அதை நிராகரித்த பெற்றோர் தனியார் மருத்துவமனை ஒன்றுக்குக் கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் பொது மருத்துவமனை டீன் கூறுகையில், சிறுவனின் ரத்த சாம்பிளை கோவைக்கு அனுப்பவுள்ளோம். அதில் ஸ்வைன் அறிகுறி தெரிந்தால் சிறுவனக்கு தனியார் மருத்துவமனையிலேயே வைத்து தீவிர சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications