நடத்தையில் சந்தேகம் - சிகரெட்டால் சூடு வைத்து மனைவியைக் கொன்ற கணவர்

Subscribe to Oneindia Tamil

கரூர்: நடத்தையில் சந்தேகம் கொண்டு மனைவி உடல் முழுவதும் சிகரெட்டால் சூடு வைத்து சித்திரவதை செய்து, கொன்ற கணவனை போலீசார் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் லாலாப்பேட்டை அருகே உள்ளது எம்.புதுப்பட்டி. இந்த பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (29). இவருக்கும் பிச்சமபட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகள் புஷ்பராணிக்கும் (24) ஐந்து மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.

திருமணம் முடிந்த சில காலமாகவே புஷ்பராணியின் நடத்தையில் தங்கவேல் சந்தேகம் கொண்டிருந்தாக கூறப்படுகின்றது. இதனால், அவரை நாள்தோறும் அடித்து, சித்திரவதை செய்து வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த சம்பவம் எல்லைமீறி சென்றதால் புஷ்பராணி விஷம் குடித்து தூக்கில் பிணமாக தொங்கினார்.

இதையடுத்து அவரது தம்பி சுகுமாருக்கு தங்கவேல் போன் மூலம் தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக, புஷ்பராணி தந்தை சுப்பிரமணியன், சுகுமார் மற்றும் உறவினர்கள் தங்கவேல் வீட்டுக்கு வந்தனர்.

தூக்கில் பிணமாக தொங்கிய புஷ்பராணியின் உடலை கீழே இறக்கி பார்த்த போது, கை, கால், தொண்டை, தொடை, மார்பு பகுதிகளில் சிகரெட் சூடு வைத்து காயம் ஏற்பட்டது தெரிய வந்தது.

இதையடுத்து தனது மகளை தங்கவேல் சித்திரவதை செய்து கொன்று தூக்கில் தொங்கவிட்டுள்ளதாக, புஷ்பராணி தந்தை சுப்பிரமணியன், லாலாப்பேட்டை போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+