அமெரிக்க இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் சுட்டுக் கொலை
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்: அமெரிக்காவின் இந்தியானா மாகாணம் கேரி நகரில், இந்திய அமெரிக்கர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். பட்டப் பகலில் இந்த படுகொலை நடந்துள்ளது.
அங்குள்ள ஸ்டோர் ஒன்றில் கிளர்க் ஆக பணியாற்றி வந்தார் அவர். சுட்டுக் கொல்லப்பட்ட இந்தியரின் உடல் அங்கேயே விழுந்து கிடந்தபோது அதைப் பார்த்து விட்டு பலரும் கண்டும் காணாமல் போயுள்ளனர். இந்த நிலையில் ஒருவர்தான் போலீஸாருக்குப் போன் செய்து சம்பவ இடத்திற்கு அவர்களை வரவழைத்துள்ளார்.
சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய அமெரிக்கரின் பெயர் குர்ஜித் சிங். வயது 26. மிகக் கொடூரமாக, முட்டாள்தனமாக அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக யுஎஸ்ஏசியன் என்ற அமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொலை குறித்து மக்கள் போலீஸாருக்குத் தகவல் தராமல் பாரபட்சமாக நடந்து கொண்டது மிகப் பெரிய தவறு என்றும் அது குற்றம் சாட்டியுள்ளது.












Click it and Unblock the Notifications