மாவோயிஸ்டுகளுக்கு தடை-தீவிரவாத இயக்கமாக அறிவிப்பு

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாவோயிஸ்ட்கள் பெரும் அட்டகாசம் புரிந்து வருகின்றனர். சிபிஐ (மாவோயிஸ்ட்) என்பது இவர்களது அரசியல் பெயராகும். இருப்பினும் இவர்கள் நக்சலைட்டுகளாகவே செயல்பட்டு வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் லால்கர் நகரையும் அதைச் சுற்றியுள்ள 50 கிராமங்களையும் மாவோயிஸ்டுகள் பிடித்ததைத் தொடர்ந்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
துணை ராணுவப்படையினரின் உதவியுடன் சமீபத்தில்தான் மேற்கு வங்க அரசு கிட்டத்தட்ட 9 மாதங்களுக்குப் பின்னர் லால்கரையும், சில கிராமங்களையும் மீட்க முடிந்தது.
இந்த நிலையில் மாவோயிஸ்டுளுக்கு மத்திய அரசு தடை விதித்து, அவர்களை தீவிரவாதிகள் என அறிவித்துள்ளது.
சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மாவோயிஸ்ட் கட்சியை மத்திய உள்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது.
இதன் மூலம் மாவோயிஸ்டுகளைக் கைது செய்ய அரசுக்கு அதிகாரம் கிடைத்துள்ளது. மேலும் அவர்களின் வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்படும். அவர்களின் அலுவலகங்களும் மூடி சீல் வைக்கப்படும்.
இடதுசாரிகள் எதிர்ப்பு..
மத்திய அரசின் இந்த முடிவுக்கு இடதுசாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து சிபிஐ எம்.பி. குருதாஸ் தாஸ் குப்தா கூறுகையில், இதை நாங்கள் ஏற்க மாட்டோம். மாவோயிஸ்டுகளை தீவிரவாத இயக்கமாக அறிவித்து அவர்களை தடை செய்ததற்குப் பதில், அரசியல் ரீதியாக அவர்களுடன் மோதி வென்றிருக்க வேண்டும் என்றார் அவர்.
சிபிஎம் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும், இந்தப் பிரச்சினைய அரசியல் ரீதியாகத்தான் தீர்க்க வேண்டுமே தவிர தடையால் ஒரு பயனும் கிடையாது.
பல்வேறு அமைப்புகளைத் தடை செய்யும் அதிகாரம் மக்களிடம் உள்ளது. இருப்பினும் அரசியல் கொள்கைகள் மூலமாகத்தான் எந்த அமைப்பையும் எதிர் கொள்ள வேண்டுமே தவிர, அவர்களை படையினரையும், போலீஸாரையும் வைத்து ஒடுக்க முயலக் கூடாது.
லால்கர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான் காண வேண்டுமே தவிர பாதுகாப்பு கொடுப்பதன் மூலம் பிரச்சினை தீர்ந்து விடாது என்றார் அவர்.
மேற்கு வங்க அரசு கூட மாவோயிஸ்டுகளுக்குத் தடை விதிக்க வாய்ப்பில்லை என்று கூறியிருந்த நிலையில் மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே!












Click it and Unblock the Notifications