ராஜினாமாவை வாபஸ் பெற்றார் சந்திரசேகர ராவ்

Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: கட்சியின் பொது குழுக் தனது ராஜினாமாவை ஏற்றுக்கொள்ளாததை அடுத்து அதை திரும்ப பெறுவதாக தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியின் தலைவர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்ற நோக்த்தில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி கடந்த 2001ல் துவக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய தெலுங்கானா கட்சி திடீரென பெரும் சரிவை சந்தித்துள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டுமே வென்று, ஏமாற்றம் அளித்தது.

இந்நிலையில் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம், தேர்தல் தோல்வி காரணமாக நேற்று முன்தினம் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரை தொடர்ந்து நேற்று கட்சியின் பொது செயலாளர் விஜயசாந்தியும் பதவி விலகினார்.

இந்நிலையில் நேற்று கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது சந்திரசேகர ராவின் ராஜினாமாவை ஏற்க பொதுக்குழு மறுத்துவிட்டது. இதையடுத்து சந்திரசேகர ராவ் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்றார்.

இது குறித்து அவர் கூறுகையில்,

தெலுங்கானா பொதுக்குழு, கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் எனது ராஜினாமாவை வாபஸ் பெற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். தொண்டர்கள் சிலர் உண்ணாவிரதம் இருந்தனர்.

எனவே தொண்டர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காகவும், தனி தெலுங்கானா கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தவும் எனது ராஜினாமாவை வாபஸ் பெறுகிறேன் என்றார் சந்திரசேகர ராவ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+