போலீஸ் வேடம்:ரூ. 50 லட்சம் கொள்ளை-திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது
சென்னை: சென்னையில் நகை கடை ஊழியரிடம் போலீஸ் வேடமிட்டு ரூ. 50 லட்சம் கொள்ளையடித்த திமுக பிரமுகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை பாரிமுனையில் ரத்தன்லால் ஜெயின் என்பவர் நகைகடை வைத்து நடத்தி வருகிறார். அவரது வீடு கீழ்ப்பாக்கம் பிளவர்ஸ் சாலையில் இருக்கிறது.
இந்நிலையில் ரத்தன்லாலின் கடை ஊழியர் கமல்ராஜ் என்பவர் ரூ. 50 லட்சத்துடன் புரசைவாக்கம் ஐரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று போலீஸ் வேடமிட்டு கமல்ராஜை வழிமறித்து சோதனை செய்தது. பின்னர் அவரிடம் இருந்த ரூ. 50 லட்சத்தை பறித்து கொண்டு சென்றுவிட்டது.
கமல்ராஜ் அது நிஜ போலீஸ் அல்ல என்பதை உணர்வதற்குள் அந்த கும்பல் பணத்துடன் மாயமாக மறைந்துவிட்டது. இதையடுத்து அவர் ரத்தன்லால் ஜெயினிடம் சம்பவத்தை கூறினார். இதையடுத்து அவர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கமல்ராஜ் ரூ. 50 லட்சம் பணம் கொண்டு வருவதை முன்னதாக தெரிந்து கொண்டு அந்த மர்ம கும்பல் செயல்பட்டுள்ளதை கண்டுபிடித்தனர். மேலும், இந்த கொள்ள சம்பவத்தில் 9 பேர் ஈடுபட்டிருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்த சத்யா என்பவர் போலீசில் சரண் அடைந்தார்.
அவர் கொடுத்த தகவலின் பேரில் திமுக வட்ட துணை செயலாளர் குடியரசு, பகுஜன் சமாஜ் கட்சியின் இளைஞர் அணி பிரமுகர் சக்திவேல், ரத்தன்லால் ஜெயினிடம் மானேஜராக வேலை பார்த்த கண்ணன், மதன், ஜெயக்குமார் ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
போலீசார் இவர்களிடம் இருந்து ரூ. 40 லட்சம் பணத்தை மீட்டனர். மீதி ரூ. 10 லட்சம் சசி, அம்பேத், மகாதேவன் என்னும் மூன்று பேரிடம் இருப்பதாக அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். இதையடுத்து போலீசார் தலைமறைவாகி இருக்கம் அந்த மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
மதுரையில் என்ஜினியரிடம் ரூ. 3 லட்சம் கொள்ளை:
மதுரையில் நடந்த மற்றொரு சம்பவத்தின் என்ஜினியர் ஒருவரிடம் போலீஸ் வேடமிட்ட நான்கு பேர் சேர்ந்து ரூ. 3 லட்சத்தை கொள்ளையடித்துள்ளனர்.
நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் என்ஜினியராக வேலை பார்த்து வருபவர் பாலகிருஷ்ணன் (40). இவர் நேற்று மதுரை அரசு மருத்துவமனையில் வேலை பார்த்து வரும் டாக்டர் பாரதி என்பவருக்கு கொடுப்பதற்காக ரூ. 3 லட்சம் பணத்துடன் மதுரைக்கு வந்துகொண்டிருந்தார்.
வாடிப்பட்டி அருகே வந்த போது மூன்று ஆண் மற்றும் ஒரு பெண் அவரது காரை வழிமறித்து நிறுத்தினர். அவர்களில் போலீஸ் உடையில் இருந்த ஒரு ஆண் உங்கள் வண்டியை சோதனையிட வேண்டும் என கூறியுள்ளார். பின்னர் அவர் வைத்திருந்த பையில் இருக்கும் ரூ. 3 லட்சத்தை பறிமுதல் செய்தனர்.
பணத்தை ஏன் பறிமுதல் செய்கிறீர்கள் என பாலகிருஷ்ணன் கேட்டதற்கு அவர்கள் காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறினர். ஆனால், பாலகிருஷ்ணன் நம்பவில்லை. இதையடுத்து அவர்களுடன் வந்த பெண், பாலகிருஷ்ணனுடம் காரில் ஏறிக்கொண்டார்.
காரை காவல் நிலையத்துக்கு விடுமாறு அந்த பெண், பாலகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். சிறிது தூரம் சென்றவுடன் அந்த பெண் பின்னால் வந்த மற்றொரு காரில் ஏறிக்கொண்டு பணத்தை காவல் நிலையத்தில் வந்து வாங்கி கொள்ளுமாறு கூறிவிட்டு, காரில் மாயமாகிவிட்டார்.
இதையடுத்து பாலகிருஷ்ணன் காவல் நிலையத்துக்கு சென்று விசாரித்த போது, தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார். இதையடுத்து மதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications