நிருபரை கடத்தி தாக்கிய திமுக பிரமுகர்!
கரூர்: ராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்ட பத்திரிக்கையாளர்கள் இன்று ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் நகர திமுக செயலாளர் ரத்னம் மற்றும் சிலரால் இராமநாதபுர மாவட்ட தமிழக அரசியல் வார இதழின் மாவட்ட நிருபர் கிஷோர் என்கிற ரவிச்சந்திரன் காரில் கடத்தப்பட்டார். அவர்கள் நிருபர் கிஷோரை கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
இந்த செயலுக்கு கரூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறுகையில்,
நிருபர் கிஷோருக்கு உரிய பாதுகாப்பு வழங்க காவல் துறையினரிடம் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அவர் தாக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த விவகாரத்தில் காவல் துறையின் செயல்பாடு வேதனை அளிப்பதாக உள்ளது.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது தமிழக முதல்வர் கருணாநிதி பாராபட்சம்காட்டாமல் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திகிறோம்.
இந்த துயர சம்பவத்தை கண்டிக்கும் வகையில் இன்று ஜூன் 23ம் தேதி ஒரு நாள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற முடிவு செய்துள்ளோம் என்றனர்.