பழனியில் தானியங்கி பஞ்சாமிர்த மெஷன்!
பழனி: பழனி கோயிலில் ரூ. 50 லட்சம் செலவில் புதிய தானியங்கி பஞ்சாமிர்தம் தயாரிக்கும் எந்திரம் வாங்கப்படும் என அறங்காவலர் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
முருக பெருமானின் ஆறுபடை வீடுகளில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒன்று பழனி முத்துக்குமார சுவாமி திருக்கோயில். இந்நிலையில் கோயிலின் அறங்காவலர் குழு கூட்டம் கோவில் மண்டபத்தில் நடந்தது. இதற்கு அறங்காவலர் குழு தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் அறங்காவலர்களான உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம், நாகராஜன், இந்திரா, குண்டன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அப்போது கோயிலின் வளர்ச்சி பணி குறித்து விவாதிக்கப்பட்டது. கோயம்புத்தூரை சேர்ந்த பக்தர் ஒருவர் முருகனுக்கு தங்க கீரிடம், வெள்ளி தட்டு ஆகியவை வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும், கோயில் பக்தர்களுக்கு வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்க ரூ. 50 செலவில் புதிய தானியங்கி எந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டது.
மேலும் அன்னதான கூடத்தை விரிவு படுத்துதல், முடி இறக்கும் இடத்தில் வசதிகளை அதிகரித்தல், பொழுது விஞ்சுகளை பழுது பார்த்தால் உள்ளிட்ட புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ. 10 கோடி செலவிட முடிவு செய்யப்பட்டது உள்ளிட்ட 281 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.