விருதுக்காக பொய்க்கால் தவில் அடித்த வித்வான்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: கலைச்சுடர்மணி விருது வேண்டி பழநியை சேர்ந்த தவில் வித்வான் ஒரு கி.மீ., தூரம் பொய்க்காலில் தவில் அடித்தபடியே கலெக்டர் அலுவலகம் வந்து மனு அளித்தார்.

பழநியைச் சேர்ந்தவர் மாரிமுத்து (43). தவில் வித்வான். இவர் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்திற்கு கலைசுடர்மணி விருது வழங்க பரிந்துரை செய்ய வேண்டி விண்ணப்பிக்க வந்தார்.

திண்டுக்கல் பைபாஸ் ரோட்டில் இருந்து பொய்க்கால் மீது நின்று தவில் அடித்துக் கொண்டே ஒரு கி.மீ., தூரம் நடந்து வந்தார். இவரது மகள் நளாயினி, உருமி வாசிப்பாளர் முருகன் ஆகியோர் உடன் வந்தனர்.

அப்போது மாரிமுத்து செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நான் கடந்த ஐந்து வருடமாக தொடர்ந்து கலைச்சுடர்மணி விருதுக்கு விண்ணப்பித்து வருகிறேன். ஒவ்வொரு வருடமும் விருது கிடைக்கும் எனக் கூறி அதிகாரிகள் ஏமாற்றி வருகின்றனர்.

அதனால் தான் எனது திறமையை நிரூபிக்க இப்படி ஒரு கி.மீ., தூரம் பொய்காலில் நடந்த படியே தவில் அடித்து வந்தேன். ஆனால் கலெக்டர் அலுவலக வாசலில் இருந்து மனு கொடுக்கும் அறைக்கு தவில் அடித்துச் செல்ல போலீஸ் அனுமதிக்கவில்லை.

எனவே சாதாரணமாகவே சென்று விருது வேண்டி மனு கொடுத்தேன். ஆனால், இந்த ஆண்டு விருது கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+