தயாநிதி வழக்கு-ஜெ கோர்ட்டில் ஆஜராக விலக்கு!
சென்னை: மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொலைபேசி இணைப்புகள் கொடுத்தது தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறாக பேசிய ஜெயலலிதா மீது தயாநிதி மாறன் எழும்பூர் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்நதுள்ளார்.
இதில், ஜூலை 1ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு கூறி ஜெயலலிதாவுக்கு கோர்ட் சம்மன் அனுப்பியுள்ளது.
இதை ரத்து செய்யக் கோரி ஜெயலலிதா சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், மாஜிஸ்திரேட் பிறப்பித்த உத்தரவில், எனது மீதான குற்றச்சாட்டுக்கான அடிப்படை முகாந்திரம் கூறப்படவில்லை.
மாஜிஸ்திரேட் மனதை செலுத்தி ஆராய்ந்து இந்த உத்தரவை பிறப்பிக்கவில்லை. எனது வாதத்தை கேட்காமலேயே மாஜிஸ்திரேட் ஒரு முடிவுக்கு வந்துள்ளார். இது அநீதியாகும். சட்டப்பூர்வமாக அது செல்லாது. அந்த புகார் மீது மாஜிஸ்திரேட் நீதி தொடர்பாக மனதை செலுத்த தவறிவிட்டார்.
என்னை துன்புறுத்தும் நோக்கத்திலும், ஒரு எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் கடமையை செய்யவிடாமலும், ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அ.தி.மு.க. பொது செயலாளர் என்ற முறையில் அந்த பணியை செய்யவிடாமலும் தடுக்கும் நோக்கத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இவ்வளவு பொறுப்புகளை கொண்ட நான் தினசரி கோர்ட்டுக்கு வர இயலாது. தமிழக மக்களின் நலனுக்காகவே எனது முழு வாழ்க்கையையும் நான் அர்ப்பணித்து இருப்பதால் இந்த வழக்கின் ஒவ்வொரு விசாரணைக்கும் ஆஜராக இயலாது. எனவே எனது சார்பில் வக்கீல் ஆஜராக அனுமதிக்க வேண்டும்.
இந்த சம்மன் அடிப்படையில் கோர்ட்டில் ஆஜராகாமல் இருக்க விதிவிலக்கு வழங்க வேண்டும். இந்த சம்மனை ரத்து செய்வதுடன் தயாநிதி மாறன் தொடர்ந்த வழக்கையும் ரத்து செய்யவேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி சிவக்குமார் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, எழும்பூர் கோர்ட்டில் நடைபெறும் விசாரணையில் ஆஜராவதிலிருந்து ஜெயலலிதாவுக்கு விலக்கு அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.
அதேசமயம், எழும்பூர் கோர்ட் பிறப்பித்த சம்மனுக்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதி மறுத்து விட்டார்.
-
NDA Alliance: தமிழகத்தில் பாஜக 27 தொகுதிகளில் போட்டி? அதிமுக அதிரடி? காங்கிரஸை விட குறைவாச்சே! -
நாளை டெல்லிக்கு பறக்கும் தினகரன், அன்புமணி? அமித் ஷா முன்னிலையில் NDA கூட்டணி தொகுதிப் பங்கீடு டீல்? -
ரஜினிகாந்த் சொன்ன ஒற்றை வார்த்தை.. அதிமுகவை பாதாளத்துக்கு தள்ளிய ரிசல்ட்! 173 இடங்களில் திமுக வெற்றி -
தொகுதிப் பங்கீடு என்னாச்சு? டெல்லிக்கு பறந்த எடப்பாடி பழனிசாமி.. நயினார் சொன்ன மேட்டர்! -
1989ல் திமுக இமாலய வெற்றி! 91இல் ஆட்சியைக் கலைத்த ஜெயலலிதா.. சிவாஜியின் புதுக்கட்சி எங்கே? -
’அம்மா’ இல்லாத பிள்ளையான அதிமுக..எடப்பாடியை அசிங்கப்படுத்திய அமித் ஷா! மனதுக்குள் குமுறும் ர.ர.க்கள் -
அதெல்லாம் முடியாதுங்க.. பாஜகவிடம் ஷோல்டரை ஏற்றிய எடப்பாடி.. லிஸ்டை பாருங்க.. அடிச்சு ஆடுறாரே! -
சும்மா கிடந்த ரஜினியை.. ஊதிக் கெடுத்த ஆதவ்! 1996 கண்ணு முன்னாடி வந்து போகுமில்லையா? வாய்ஸ் யாருக்கு? -
தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு ஸ்கெட்ச்.. ஐகோர்ட்டில் பரபர மனு! -
“2 மேடைகளில் எது தமிழ்நாட்டுக்கான மேடை?” அதிமுக தலைவர்களின் பேச்சுக்கு ஸ்டாலின் காட்டிய ரியாக்ஷன்! -
தமிழக தேர்தல் வரலாறு: ‘ஜெ’ அணியா? ‘ஜா’ அணியா? - செங்குத்தாக உடைந்த அதிமுக.. அன்று நடந்தது என்ன? -
பதவியைக் காக்க கருணாநிதியிடம் ஆதரவு கேட்ட ஜானகி? 1988இல் ஆட்சி கலைப்பு.. ஜெயலலிதா எடுத்த சபதம்?











Click it and Unblock the Notifications